Tuesday, April 23, 2024
- Advertisement -
Homeசினிமாகடன் பிரச்சினையில் சிக்கி தவிக்கும் சிவகார்த்திகேயன்.. அடுத்தடுத்து சன் பிக்சர்ஸ் உடன் 2 படம்.. இயக்குனர்...

கடன் பிரச்சினையில் சிக்கி தவிக்கும் சிவகார்த்திகேயன்.. அடுத்தடுத்து சன் பிக்சர்ஸ் உடன் 2 படம்.. இயக்குனர் யார் தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தற்பொழுது மாவீரன்,பிரின்ஸ் என்று அடுத்தடுத்து படங்களை நடித்துக் கொண்டு இருக்கிறார். பிரின்ஸ் என்ற திரைப்படத்தை ஜதிரத்னலு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குனர்
அனுதீப் இயக்கி வருகிறார.
தமிழ் சினிமாவில் ஈஸ்வரன்,மம்பட்டியான், ஒஸ்தி போன்ற படங்களுக்கு இசையமைத்த தமன் தற்போது முதன்முறையாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் பிரின்ஸ் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் .

பிரின்ஸ் திரைப்படத்திற்கான சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.
வருகின்ற தீபாவளிக்கு பிரின்ஸ் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
தொடர்ந்து இயக்குனர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தை நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக அதிதி சங்கர் நடித்து வருகிறார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ஆர் ரவிக்குமாரோடு இணைந்து அயலான் என்று திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்த திரைப்படமும் விரைவில் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நேற்று நாளை என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆர் ரவிக்குமாரின் அடுத்த படைப்பாக அயலான் திரைப்படம் அமைகிறது .

- Advertisement -

இவருடைய முதல் படமே வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது.அதேபோல் அயலான் திரைப்படமும் வேற்று கிரகவாசிகளான ஏலியன்சை கதைக்களமாக கொண்ட அமைந்திருக்கிறது. இது சிவகார்த்திகேயனுக்கும் முற்றிலும் புதுமையான திரைப்படமாக அமைந்திருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இவற்றைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் இன்னும் ஒரு இயக்குனரோடு கைகோர்த்து இருக்கிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் பெரியசாமி. இவருடைய முதல் திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவரை அழைத்து பாராட்டியதோடு தமக்கு ஏற்றது போல் ஒரு கதை செய்யும்மாறு கூறியிருந்தார். தன்னுடைய முதல் படத்திலேயே இப்படி ஒரு பெயரை பெற்ற திறமை வாய்ந்த இயக்குனர் பெரிய சாமியோடு தான் நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்த திரைப்படத்தை நடிப்பதற்கு ஒப்பந்தம் இட்டு இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் உடைய சொந்த வாழ்விலும் நிறைய கடன் பிரச்சனைகள் இருப்பதால் அதை சரி செய்வதற்காக அடுத்தடுத்து தனக்கு வரும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடிகர் சிவகார்த்திகேயன் நிறைய படங்களை நடித்து வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. காரணங்கள் எதுவானாலும் நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கு அவருடைய படங்களைப் பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ளனர். சிவகார்த்திகேயன் இரண்டு படங்களும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Popular