Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாடிவிட்டரிலிருந்து விலகிய சிவகார்த்திகேயன்.. திடீர் முடிவு ஏன்?

டிவிட்டரிலிருந்து விலகிய சிவகார்த்திகேயன்.. திடீர் முடிவு ஏன்?

தமிழ் சினிமாவில் அடுத்த தலைமுறை நடிகர்களில் டாப் இடத்தில் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். பெரிய நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அவருடைய படங்கள் தமிழகத்தில் 80 கோடி ரூபாய் வசூல் சாதனைகள் எல்லாம் படைத்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் இன்று ஒரு அதிர்ச்சி முடிவை வெளியிட்டுள்ளார். சிவகார்த்திகேயன் ட்விட்டர் தளத்திலிருந்து சிறிது காலம் விலகி இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். எனினும் அவருடைய டிவிட்டர் பக்கம் அட்மினால் நிர்வாகிக்கப்படும் என்றும் தன்னுடைய படம் தொடர்பான அறிவிப்புகள் அதிலிருந்து வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இந்த பதிவை வெளியிடும்போது சிவகார்த்திகேயன் விமானத்தில் இருந்தவாறு பதிவிட்டுள்ளார். அதன் புகைப்படங்களும் அதில் இடம்பெற்றுள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் வெளிநாட்டிற்கு சென்று சிறிது காலம் ஓய்வெடுக்க போகிறாரா என்று தகவல் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அவர் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று அயலான் படத்தின் படப்பிடிப்பு பணியும் முடிவடைந்து. அது தீபாவளி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து தற்போது சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த கதாபாத்திரத்துக்காக தனது உடலை சிவகார்த்திகேயன் வலுசேர்த்து வருகிறார். இதன் காரணமாக சிவகார்த்திகேயன் சிறிது காலம் அனைவரின் கண்களிலும் படாமல் வெளிநாட்டில் தங்கி பயிற்சி எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சில காலம் வரை நாம் சிவகார்த்திகேயனை பார்க்க முடியாது.

Most Popular