Tuesday, April 16, 2024
- Advertisement -
Homeசினிமாஹோட்டல் சர்வராக இருந்தேன்.. பெரிய படத்தில் சிக்ரெட்டாக நடிக்கிறேன்.. எஸ்.ஜே.சூரியா பேட்டி

ஹோட்டல் சர்வராக இருந்தேன்.. பெரிய படத்தில் சிக்ரெட்டாக நடிக்கிறேன்.. எஸ்.ஜே.சூரியா பேட்டி

- Advertisement -

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் ஒருவரானவர் எஸ் ஜே சூர்யா. நடிகர் மட்டும் அல்லாமல் ஒரு சிறந்த இயக்குனரும் ஆவார். இவரது இயக்கத்தில் வெளியான வாலி, குஷி,நியூ, அன்பே ஆருயிரே இசை போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது தமிழ் சினிமாவில் இவர் நடித்த மாநாடு போன்ற திரைப்படங்களிலும் இவருடைய நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது. இவர் அண்மையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்று இருந்தார். அது தனது ஆரம்ப காலத்தையும் தற்போது நிலையும் பற்றி கூறியிருந்தார்.

தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த இடத்தில் இருக்கும் எஸ் ஜே சூர்யா ஆரம்ப காலத்தில் ஹோட்டல் சர்வராக பணியாற்றி இருக்கிறார்.திரை உலகிற்கு அவர் காலடி எடுத்து வைக்கும் பொழுது ஒரு வேலை நாம் இதில் தோற்று விட்டால் மீண்டும் ஹோட்டலில் சர்வராக வேலை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்ற உறுதியோடு தான் சினிமாவில் தன் முயற்சியை செய்து இருக்கிறார்.அந்த மன உறுதி என்று அவரை வெற்றியாளர் ஆக்கி இருக்கிறது.

- Advertisement -

எஸ் ஜே சூர்யா நடிக்க ஆரம்பித்த காலங்களில் அவர் நடிக்கும் படங்களில் எல்லாம் சற்று கவர்ச்சியான காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.ஆனால் இப்பொழுதெல்லாம் எஸ் ஜே சூர்யா ஒரு கண்ணியமான நடிப்பை நடித்து வருகிறார். இந்த மாற்றம் அவருக்குள் அவர் நடித்த இறைவி படத்திற்கு பிறகு தான் ஏற்பட்டது என்று கூறியிருந்தார். அது மட்டுமல்லாமல் இளம் வயதில் கல்லூரி பருவத்தில் இளைஞர்கள் துடிப்போடு இருப்பதற்கு அந்த வயது தான் காரணம்.அது போல் தான் எனக்கும் இந்த மாற்றம் ஏற்பட்டது என்று கூறியிருந்தார்.

- Advertisement -

மேலும் நான் ஒரு கதையைக் கேட்டால் அது எப்படி இருந்தாலும் நடிப்பதில்லை.எனக்கும் அந்தக் கதைக்கும் ஒரு தொடர்பு உண்டாகும், அப்படி இருந்தால் மட்டுமே அந்த கதையில் நான் நடிப்பேன் என்றும் கூறியிருந்தார். அந்தக் கதையை நான் உணர்ந்துதான் நடிப்பேன் என்றும் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து தற்பொழுது மார்க் ஆண்டனி திரைப்படத்திலும் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்திருக்கிறார் .அதில் அவருக்கு டபுள் ஆக்ட் என்றும் கூறியிருந்தார். இதை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா ஒரு நல்ல கதையை கொண்ட பெரிய படத்தில் தான் நடித்திருப்பதாகவும் அந்த திரைப்படத்தைப் பற்றி நான் வெளியில் பேசக்கூடாது. அந்தப் படக்குழுவினர் அதை சீக்ரெட் ஆக வைத்திருக்கிறார்கள். அதை நான் கூறுவது சரியில்லை என்று கூறியிருந்தார்.

இவ்வாறாக நடிகர் எஸ் ஜே சூர்யா தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்திருந்தார். இதன் மூலம் நடிகர் ஜே.சூர்யா ஒரு சிறந்த படத்தில் நடித்திருக்கிறார் அது விரைவில் வெளியாக உள்ளது என்று எஸ் ஜே சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்திலும் மகிழ்ச்சியிலும் இருக்கிறார்கள்.

Most Popular