Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாமீண்டும் சிக்கலில் சிம்பு..திரும்பவும் ரெட் கார்டா?

மீண்டும் சிக்கலில் சிம்பு..திரும்பவும் ரெட் கார்டா?

வல்லவன், மன்மதன், சரவணா போன்ற திரைப்படங்களில் எல்லாம் சுறுசுறுப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் எஸ் டி ஆர். இவற்றைத் தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி கண்டார். ஆனால் சில வருடங்களாக சினிமாவின் மீது எந்த ஆர்வமும் காட்டாமல் ஓய்வில் இருந்தார் நடிகர் சிம்பு.

- Advertisement -

மீண்டும் கடந்த 2021 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார் நடிகர் சிம்பு .இந்த திரைப்படம் இவரை மீண்டும் திடீரென்று உச்சியில் கொண்டு நிறுத்தியது. அந்த அளவிற்கு இவருக்கு வெற்றியை தேடி தந்த திரைப்படங்களில் ஒன்றாகும் மாநாடு திரைப்படம்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து அவர் மீண்டும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு,ஒபேலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல போன்ற திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்றார். இதன் மூலம் சிம்பு ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார்.

- Advertisement -

மேலும் சினிமாவில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்காக பருமனான தன் உடலை இன்னும் இழைத்து அழகான உடல் கட்டினை பெறுவதற்கான வேலையில் ஈடுபடுவதற்காக தாய்லாந்து சென்று மீண்டும் ஒரு புது லுக்கில் நடிகர் சிம்பு வந்திருக்கிறார்.

பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்தில் இசை வெளியீட்டு விழாவிற்கு அந்த புது லுக்கோடு தான் நடிகர் சிம்பு வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதைப் பார்த்ததுமே ரசிகர்கள் முடிவு செய்து விட்டார்கள் எஸ்டிஆர் தன்னுடைய அடுத்த திரைப்படத்தின் நடிக்க தயாராகி விட்டார் என்று.

அது உறுதி செய்யும் விதமாக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு தன்னுடைய 48வது திரைப்படத்தை நடிக்கப் போகிறார் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது. மேலும் இந்த திரைப்படத்தை உலகநாயகன் கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டஸ்ட்ரி இந்த திரைப்படத்தை தயாரிக்க இருப்பதான தகவலும் வெளியானது.

அந்த திரைப்படத்தில் நடிக்க தொடங்கிய சிம்புவிற்கு ஒரு சிக்கல் ஏற்பட்டது. இதற்கு முன்பு பத்து தலை திரைப்படத்திற்குப் பிறகுஐசரி கணேஷ் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் கொரோனா குமார் என்று சொல்லப்படும் திரைப்படமும் நடிகர் சிம்பு நடிப்பதாக ஒற்றுக்கொண்டார்.

பிறகு சில பல காரணத்தினால் திரைப்படங்களில் நடிக்காமல் போய்விட்டது இதன் காரணத்தினால் தான் தன்னுடைய 48வது திரைப்படத்தை தேசிங் பெரியசாமியுடன் நடிக்கப் போவதாக நடிகர் சிம்பு முடிவு செய்திருக்கிறார்.

இத்திரைப்படத்தை நடிக்க தொடங்கியவுடன் ஐசரி கணேஷ் நீங்கள் நடிப்பதாக சொன்ன அந்த திரைப்படத்தில் ஏதாவது ஒன்றாவது நடித்தே ஆக வேண்டும் என்று நடிகர் சிம்புவிடம் பிரச்சனை செய்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் காரணமாக எஸ்டிஆர் இன் 48 வது திரைப்படம் படப்பிடிப்பு தொடங்குமா தொடங்காதா என்ற கேள்வி ரசிகர்களிடம் ஏற்பட்டு இருக்கிறது. நடிகர் சிம்பு என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்

Most Popular