Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாவீரன் படத்தோட கதை இது தான்! மின்னல் முரளி காப்பி மாதிரி இருக்கே?

வீரன் படத்தோட கதை இது தான்! மின்னல் முரளி காப்பி மாதிரி இருக்கே?

தமிழ் சினிமாவில் மரகத நாணயம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன். மரகத நாணயம் திரைப்படத்தை பார்த்து சிரிக்காதவர்கள் இருக்கவே முடியாது.

- Advertisement -

அந்த அளவுக்கு வித்தியாசம் ஆன கதைக்களத்தை சிறப்பாக கொடுத்து இருப்பார். இந்த நிலையில் அவருடைய அடுத்த திரைப்படமான வீரன் வரும் ஜூன் ஒன்றாம் தேதி நாளை ரிலீஸ் ஆகிறது. இதில் ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடிக்கிறார். தமிழ் சினிமாவில் முதல் சூப்பர் ஹீரோ படமாக இது அமைந்துள்ளது.

- Advertisement -

மேலும் இந்த படம் மலையாளத்தில் ஏற்கனவே வந்த மின்னல் முரளி திரைப்படத்தின் ரீமேக் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் கதை என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -

ஹிப் ஆப் ஆதிக்கு 15 வயது இருக்கும் போது அவர் மின்னல் வெட்டி பாதிக்கப்பட்டிருக்கிறார். அதன் பிறகு கொஞ்ச நாள் கோவமாவில் ஹிப்ஹாப் ஆதி இருக்கிறார். அதன் பிறகு அவருடைய தங்கை ஹிப் ஹாப் ஆதி சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்கிறார்.

அப்போதுதான் ஹிப்பாப் ஆதி தமக்கு மின்னலை உருவாக்கவும் கட்டுப்படுத்தவும் சக்தி இருக்கிறது மற்றும் மனிதர்களின் மனதை படிக்கவும் தெரியும் என்பதை கற்றுக் கொள்கிறார். அதன் பிறகு ஊர் திரும்பும் ஹிப்பாப் அதிக்கு என்ன நடக்கிறது.

அவர் தனது சக்தியை வைத்து மக்களை எப்படி பயன்படுத்துகிறார் என்பதை நகைச்சுவையாக சொல்லி இருக்கும் படம் தான் வீரன். குழந்தைகளுக்கும் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இந்த படம் அமைக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.வீரன் படத்தின் டிரைலர் மக்களை பெருமளவில் ஈர்க்கவில்லை. இந்த நிலையில் படமாவது வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Most Popular