Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமா“என்னுடைய முகம் தெரியல னு சொல்ராங்க …” ஜவான் திரைப்பட போஸ்டர் குறித்த சர்ச்சைக்கு ஷாருக்...

“என்னுடைய முகம் தெரியல னு சொல்ராங்க …” ஜவான் திரைப்பட போஸ்டர் குறித்த சர்ச்சைக்கு ஷாருக் கான் முற்றுப்புள்ளி

தற்போதைய காலகட்டத்தில் நடிகர், நடிகைகள் அனைவரும் ரசிகர்களுடன் உரையாடுவதற்கு சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தினார்கள். அந்த வகையில் நடிகர் சாருக் கான் ட்விட்டர் தளத்தில் ஆஸ்க் எஸ்.ஆர்
கே என்ற ஹாஷ் டேக் மூலம் ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில்கள் தெரிவித்து வந்தார் இந்த நிலையில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் பதில் தெரிவித்திருக்கிறார்.நடிகர் ஷாருக்கான்.

- Advertisement -

இயக்குனர் அட்லி நடிகர் ஷாருக்கான், நடிகை நயன்தாரா மற்றும் பலர் நடிக்கும் இந்தி திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்திற்கு பட குழு ஜவான் என்று பெயர் வைத்துள்ளது.

படம் ஃபேன் இந்தியா திரைப்படமாக வெளிவர உள்ளது. சில நாட்களுக்கு முன்பு படத்தின் போஸ்டர் வெளியானது. இது குறித்து ரசிகர்கள் அனைவரும் இந்த போஸ்டரில் நடிகர் ஷாருக்கான் இல்லை என்றும், இதில் வேறு யாரும் இருக்கிறார்கள் என்று கூறியதற்கு நடிகர் ஷாருக்கான் பதில் அளித்துள்ளார்.

- Advertisement -

இந்த படத்தில் நடிகர் ஷாருக்கான் முற்றிலும் அலங்கோலமான நடிப்பது போன்ற இதுவரை வெளியாகிய படங்கள் அனைத்தும் பிரதிபலிக்கின்றன. அந்த போஸ்டரும் அதை மேலும் உறுதி செய்ததால் ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தில் நடிகர் ஷாருக்கான் நடிக்கவில்லை அவருக்கு பதில் வேற யாரையோ நடிக்க வைத்து படத்தில் அவர் பெயரை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்தார்கள்.

- Advertisement -

ரசிகர் ஒருவர் ஜவான் திரைப்படம் பற்றி நடிகரிடம் கேட்க அதற்கு நடிகர் ஷாருக்கான் பதிலளிக்கும் விதமாக ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.அந்த பதிவில் அவர் ” ஓகே உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்பட போஸ்டரில் என் முகம் தெரியவில்லை என்று சொன்னதற்காக அந்த படத்தில் நான் நடித்துள்ள ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறேன். மேலும் படத்தில் எது தேவை என்றாலும் என்னிடம் கேளுங்கள், உங்களுக்கான தகவலை நான் அளிக்கின்றேன். தயாரிப்பாளரையோ, இயக்குனரையோ தொந்தரவு செய்யாதீர்கள் வருகின்ற செப்டம்பர் 7ஆம் தேதி உங்களை திரையரங்கில் சந்திக்க வருகிறேன் அனைவரையும் நேசிக்கிறேன் ” என்று அந்த பதிவில் பதிவிட்டிருந்தார்.

தமிழில் ராஜா ராணி, மெர்சல் மற்றும் பிகில் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி தமிழ் மொழியை தாண்டி அதுவும் இந்து திரையுலகில் முன்னணி நடிகரான சாருக்கானை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருப்பதால் நிறைய படம் கட்டாயம் வெற்றிபெறும் என்று அவரது ரசிகர்கள் உள்ளார்கள்.

மேலும் இந்த படத்திற்கு வலு சேர்க்கும் விதமாக பல திரை நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி உள்ளது. இந்த படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக உள்ளது என நடிகர் ஷாருக் கான் தகவல் தெரிவித்துள்ளதால் அவரது ரசிகர்கள் அனைவரும் தற்போது இருந்து எதிர்பார்த்து காத்திருக்க துவங்கி விட்டார்கள்.

Most Popular