சினிமா

தளபதி 67 படப்பிடிப்பு நேற்று தொடங்கியதா? மன்னிப்பு கேட்ட மனோபாலா.. நடந்தது என்ன?

ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் திரைப்படம் தளபதி 67. கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், தற்போது மீண்டும் விஜய் உடன் இணைகிறார் .மேலும் இந்த படம் கேங்ஸ்டர் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .வாரிசு திரைப்படத்தின் வெளியீடு பிறகு தளபதி 67 குறித்து அறிவிப்பு வெளியாக வேண்டும் என விஜய் விரும்பியதால் பட குழு மௌனம் காத்து வருகிறது.

Advertisement

இந்த நிலையில் இயக்குனரும் நடிகருமான மனோபாலா தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதன் காரணமாக விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி இருந்தனர். பல செய்தி தொலைக்காட்சி சேனல்களும் பிரேக்கிங் நியூஸ் ஆக செய்தியை வெளியிட்டனர். எனினும் தற்போது தனது டிவிட்டை  டெலிட் செய்து விட்டதாக குறிப்பிட்ட மனோபாலா, என்னை மன்னித்து விடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். அப்போது தளபதி 67   சூட்டிங் தொடங்கவில்லையா? ஏன் மனோபாலா திடீரென்று மன்னிப்பு கேட்டார்? அப்போது என்னதான் நேற்று நடந்திருந்தது என்று குழப்பத்தில் இருந்தனர். தளபதி 67 குறித்து அறிவிப்பு வெளியானால் வாரிசு படத்தில் மீதான எதிர்பார்ப்பு குறைந்துவிடும் என்பதால் பட குழு அமைதி காக்கிறது. இதனை உடைக்கும் வகையில் மனோபாலா செயல்பட்டதால் தான் நேற்று அவர் பகிரங்கமாக மதிப்பு கேட்டுள்ளார்.

Advertisement

இதேபோன்று நேற்று நடைபெற்றது தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் வெறும் சோதனை படப்பிடிப்பு மட்டும் தான் நேற்று நடந்திருக்கிறது. இது அதிநவீன கேமராக்களை லோகேஷ் கனகராஜ் பயன்படுத்தி சோதனை செய்து பார்த்து இருக்கிறார். அதன் புகைப்படத்தில் இன்னும் தற்போது வெளியாகியிருக்கிறது.
ஏற்கனவே ரோபோ கேம் ஆகிவற்றை விக்ரம் படத்தில் பயன்படுத்திய லோகேஷ் கனகராஜ் தற்போது ஹாலிவுட் படத்தில் என்னென்ன பயன்படுத்தப்படுகிறதோ அதனை தமிழ் சினிமாவில் இறக்கி ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார். அந்த கேமராக்களை சோதனை செய்யும் முயற்சியும் நேற்று நடந்தது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top