Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாதனி ஒருவன் 2 திரைப்படத்தில் நடிக்கும் ஜெய்ரவி.. படபிடிப்பு எப்போது?

தனி ஒருவன் 2 திரைப்படத்தில் நடிக்கும் ஜெய்ரவி.. படபிடிப்பு எப்போது?

- Advertisement -

நடிகர் ஜெயம்ரவி வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது தனி ஒருவன் தான். தனது சகோதர ர் ஜெயம் ராஜா இயக்குனராக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படங்களில் தனி ஒருவனும் ஒன்று. அரவிந்த் சாமிக்கு பெரிய கம்பேக் கொடுத்த படமாக தனி ஒருவன் அமைந்தது. இந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் இது ரீமேம் செய்யப்பட்டு ஹிட்டானது.

  இந்த நிலையில் தனி ஒருவன் திரைப்படம் ரிலீஸ் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க உள்ளதாக பல நாட்களாகவே செய்திகள் வந்தன. தற்போது இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயம் ரவி பேட்டி ஒன்றை கூறியுள்ளார். அதில் தனி ஒருவன் திரைப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை சகோதரர் ராஜா ஏற்கனவே தயார் செய்து விட்டதாக கூறியுள்ளார்.

- Advertisement -

தனி ஒருவன் 2 திரைப்படத்தை எடுக்க தயாராகும் போது தான் தமக்கு பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த வாய்ப்பு கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளார். அதனை வீணடிக்க கூடாது என்பதற்காகத்தான் தனி ஒருவன் 2 படத்தை தாங்கள் தள்ளி வைத்திருப்பதாக விளக்கம் அளித்துள்ளார். தற்பொழுது தாம் ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடித்துவிட்டு அண்ணனும் ஃப்ரீ ஆகும் நேரத்தில் மீண்டும் இருவரும் இணைந்து தனி ஒருவன் படத்தின் இரண்டாவது பாகத்தை தொடங்க உள்ளதாக ஜெயம் ரவி கூறியுள்ளார்.

- Advertisement -

ஜெயம் ரவி தற்போது அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அது எல்லாம் முடிந்த பிறகு தனி ஒருவன் 2 படப்பிடிப்பு தொடங்கும். இதனால் இந்த படம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியுள்ளது.

தனி ஒருவன் 2 படத்தின் பெரிய பிளஸ் பாயிண்ட்டாக பார்க்கப்பட்ட அரவிந்த்சாமிக்கு பதில் யார் வில்லனாக நடிப்பார் என்ற கேள்விக்கு ஜெயம் ரவி பதில் கூறாமல் தவிர்த்து விட்டார். ஜெயம் ரவி நடித்து பெரும் எதிர்பார்க்கப்படும் பொண்ணியின் செல்வன்  2 திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்திற்காக ஏப்ரல் மாதம் முழுவதும் ஜெயம் ரவி புரோமோசன் பணிக்காக தனது கால் சீட்டுகளை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular