Wednesday, May 1, 2024
- Advertisement -
Homeசினிமா“நான் இதற்காக அழுகாத நாட்கள் இல்லை இன்றும் அழுது கொண்டிருக்கிறேன்” - நினைவுகளை பகிர்ந்த நடிகை...

“நான் இதற்காக அழுகாத நாட்கள் இல்லை இன்றும் அழுது கொண்டிருக்கிறேன்” – நினைவுகளை பகிர்ந்த நடிகை சதா

தமிழ் திரை உலகில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகை சதா. இவர் இயக்குனர் மோகன் ராஜா இயக்கிய ஜெயம் படத்தில் ரவியுடன் நடித்திருந்தார் இந்த படத்திற்கு பின்பு தான் ஜெயம் ரவிக்கு ஜெயம் ரவி என்ற பெயர் வந்தது என நாம் அனைவரும் அறிந்து ஒன்று.

- Advertisement -

இவருக்கு முதல் படமான ஜெயம் திரைப்படம் சிறப்பான படமாக வந்தது. இதனைத் தொடர்ந்து இவர் அன்னியன், திருப்பதி என பல தமிழ் படங்களில் நடித்திருந்தார். இவர் தமிழை தாண்டி மலையாளம் தெலுங்கு திரைப்படங்களிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் இவர் தமிழர் கடைசியாக 2018 ஆம் ஆண்டு வெளியான டார்ச் லைட் திரைப்படத்தின் நடித்திருந்தார் அதன் பிறகு அவர் அதிகமாக தமிழ் திரையில் காணப்படவில்லை.

2018 ஆம் ஆண்டில் பின்பு நடிப்பு துறையில் இருந்து முழுவதும் ஒதுங்கி அவருக்கான வேலைகளில் ஈடுபட்டார். இதில் முக்கியமான ஒன்றாக 2019-ம் ஆண்டு மும்பை மாநகரில் “எர்த் லிங்ஸ் கஃபே” எனும் உணவகத்தை தொடங்கினார். இந்த உணவகத்தை தொடங்கியதிலிருந்து முழு கவனமும் அந்த உணவகத்தின் மீது அவருக்கு இருந்தது ஆனால் அந்த மகிழ்ச்சி அவருக்கு அதிகமாக நீடிக்கவில்லை.

- Advertisement -

கடைசில நாட்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் அந்த உணவகத்தின் தற்போதைய நிலை குறித்து கூறி மிகவும் வருத்தப்பட்டுள்ளார் நடிகை சதா. இந்த பதிவில் அவர் “ஏப்ரல் 23 2019 ஆம் ஆண்டு அந்த உணவகத்தை தொடங்கினேன். அன்றிலிருந்து எனது 12 மணி நேரம் முழுவதும் அந்த உணவகத்தில் இருந்தேன். அந்த உணவகத்தையே முழுவதுமாக நேசிக்க ஆரம்பித்து அதை திறம்பட நடத்தியும் வந்தேன். அதே வேளையில் அந்த இடத்திற்கான மற்றும் உணவகத்திற்கான வாடகையை உரிமையாளருக்கு சரியாக செலுத்தியும் வந்தேன். ஆனால் உரிமையாளர் திடிரென்று என்னை தொடர்பு கொண்டு அந்த இடத்தை காலி செய்ய வலியுறுத்தினார்” பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

மேலும் அந்த பதிவில் அவர் கூறியிருப்பது ” நான் உயிருக்கு உயிராக நேசித்த உணவகத்தை எப்படியாவது தொடர்ந்து நாம் நடத்தி வரவேண்டும் என்பதற்காக நானும், எவ்வாறு எல்லாம் உரிமையாளர் அணுக முடியுமா அவ்வாறெல்லாம் பேசி பார்த்தேன் கேட்டு பார்த்தேன் அவர் எதற்கும் தல அசைக்காமல் ஒரே முடிவாக அந்த இடத்தை காலி செய்து கொடுங்கள் என்று என்னை கட்டாயப்படுத்தி அங்கிருந்து என்னை அனுப்பினார். இந்த சம்பவத்தை நினைத்து கடந்த ஒரு சில வாரங்களாக தொடர்ந்து நான் அழுது கொண்டிருக்கிறேன் என்று அந்த காணொளியில் நடிகை சதா பேசியிருந்தார்.

மேலும் மிகவும் மன வருத்தத்துடன் பேசிய நடிகை சதா ரசிகர்களுடன் இந்த ஒரு மாதத்திற்குள் தங்களுக்குப் பிடித்த உணவு அனைத்தையும் சாப்பிட்டு மகிழுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Most Popular