Saturday, September 14, 2024
- Advertisement -
Homeசினிமா“கன்னடத்துக்குள் தமிழ் இருக்கிறது! திராவிடத்திற்குள் கன்னட மொழி இருக்கிறது "- தமிழ் தாய் வாழ்த்தை பாதியில்...

“கன்னடத்துக்குள் தமிழ் இருக்கிறது! திராவிடத்திற்குள் கன்னட மொழி இருக்கிறது “- தமிழ் தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியது குறித்து கவிஞர் வைரமுத்து ஆதங்கம்

கர்நாடக மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக கட்சியினர் அரங்கேற்றிய செயல் தமிழர்கள் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.கர்நாடகா மாநிலத்தின் சிவமோகா நகரில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா உட்பட பல பாஜக தலைவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

- Advertisement -

அப்போது கூட்டம் தொடங்கிய போது தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதை அடுத்து திடீரென்று பாஜக முன்னாள் அமைச்சர் குறிக்கிட்டு அதை நிறுத்தி, தேசிய கீதத்தை இசைக்க சொன்னார். இது பற்றி யாரும் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பாடலாசிரியர் வைரமுத்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் வரும் மே மாதம் பத்தாம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடந்தது. இந்த தேர்தலில் பிரதான கட்சிகளான பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் போட்டியிடுகிறது. இதனால் கடும் போட்டி நிலவுகிறது.

- Advertisement -

தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அனைத்து கட்சிகளும் களத்தில் விறுவிறுப்பாக இறங்கிய கடைசி கட்ட வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தென்னிந்தியாவில் பாஜக நேரடியாக ஆட்சி செய்யும் முறை மாநிலம் கர்நாடக என்பதால் இந்த முறை, பாஜகவின் வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவு என்று கூறப்படுகிறது அதனால் தமிழக தலைவர் முதல் கொண்டு கர்நாடகாவில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது பிரச்சாரத்தின் போது,தமிழ் தாய் வாழ்த்து ஒலிக்க அதை நிறுத்திவிட்டு மாநில பாடலை பாடினார்கள். தமிழ் தாய் வாழ்த்து பாதிலேயே நிறுத்தப்பட்ட சம்பவம் பிரச்சார கூட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.

அந்த பதிவில் அவர் “கர்நாடகா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து
பாதியில் நிறுத்தப்பட்டதுகண்டு
இடிவிழுந்த மண்குடமாய் இதயம் நொறுங்கியது !
ஒலிபரப்பாமல் இருந்திருக்கலாம்;
பாதியில் நிறுத்தியது ஆதிமொழிக்கு அவமானம். கன்னடத்துக்குள்
தமிழும் இருக்கிறது; திராவிடத்திற்குள் கன்னடமும் இருக்கிறது! யாரும் மறக்க வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.

தற்பொழுது கவிஞர் வைரமுத்து அவர்கள் கூறிய கருத்து வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular