சினிமா

பின்வாங்கிய துணிவு.. வாரிசு உடன் மோதலை தவிர்க்க புதிய ரிலிஸ் தேதி

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் இருவரான நடிகர் விஜய் அஜித் திரைப்படம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக விஜய், அஜித் ரசிகர்கள் கடும் உற்சாகத்தில் இருந்தனர். இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் மோதுவதால் போதிய திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் நிலவும் என புகார் இருந்தது.
எனினும் அதனையும் மீறி இரண்டு படங்கள் ஒரே தேதியில் தான் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

Advertisement

துணிவு திரைப்படத்தை விட வாரிசு படத்தில் பிசினஸ் பெரியது என்பதால் தங்களுக்கு கூடுதல் திரையரங்குகள் வேண்டும் என தில் ராஜு கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து தமிழகத்தில் சென்னை, நார்த் ஆற்காடு, சவுத் ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய நான்கு பகுதிகளில் வாரிசு வெளியிடும் உரிமையை ரெட் ஜெயின்ட்ஸ் நிறுவனம் வாங்கிக் கொண்டது .இந்த நிலையில் தான் முதல் நாள் வசூல் யாருக்கு அதிகமாக இருக்கும் என்று விஜய் அஜித் ரசிகர்களுடைய கடும் போட்டி நிலவியது .

ஆனால்  இரு படங்களின் வசூலும் பாதிக்கப்படும் நிலை உருவாகியது. இதனை அடுத்து துணிவு திரைப்படம் தற்போது வாரிசுடன் நேரடி மோதலை ஈடுபடுவதை தவிர்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பொங்களை முன்னிட்டு வாரிசு திரைப்படம் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனால் துணிவு திரைப்படம் நேரடி மோதலை தவிர்க்க ஜனவரி 11ஆம் தேதியே தியேட்டரில் ரிலீஸ் செய்ய பட குழு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

Advertisement

இதன் காரணமாக கேரளாவில் பதினொன்றாம் தேதியே ரசிகர்களுக்கு சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. துணிவு பட குழுவில் இந்த முடிவு அவர்களுக்கு பெரிய சாதகத்தை ஏற்படுத்தும். இரண்டாவது நாள் வாரிசு ரிலீஸ் ஆகும் என்பதால் அந்தப் படத்தின் வசூல் குறைந்தாலும் முதல் நாளில் அதிக வசூலை ஈட்டி முன்னிலையில் இருக்க வாய்ப்பு இருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top