சினிமா

உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் வரும் 17ஆம் தேதி வெளியாகிறது

இயக்குனர் மாறன் இயக்கத்தில் நடிகரும் தற்போது அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும்  கண்ணை நம்பாதே என்று திரைப்படம் வருகின்ற மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது.

Advertisement

இந்தத் திரைப்படத்தின் உடைய ட்ரெய்லர் ஒரு பத்து நாட்களுக்கு முன்பு இணையதளங்களில் வெளியிடப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு நான் இனி  சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியதை நினைவில் கொண்டு அதை குத்திக் காட்டும் வகையில் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியவர் இப்பொழுது நடித்திருக்கிறார் என்று பேச தொடங்கினார்கள்.

ஆனால் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த திரைப்படம் இயக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. உதயநிதி ஸ்டாலின் இந்த திரைப்படத்தை இரண்டு வருடங்களுக்கு முன்பே நடித்து விட்டார். சில காரணங்களால் அது திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்கு நாளாகியது இது சிலர் அறிந்திருக்கலாம் பலர் அறியாமலும் இருக்கலாம்.

Advertisement

அதேபோல் இதுவே உதயநிதி ஸ்டாலின் நடித்து திரையரங்குகளில் வெளிவரும் கடைசி திரைப்படமாக இருக்கும். உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு நான் நடிக்க மாட்டேன் என்று கூறிய காரணத்தால் இதற்குப் பிறகு அவர் எந்த படமும் நடிக்க போவது இல்லை என்பதால் உதயநிதியை நடிகனாக ரசித்த பல ரசிகர்களுக்கு இந்தத் திரைப்படம் ஒரு நல்ல எதிர்பார்ப்பை தந்திருக்கிறது.

மேலும் இந்தத் திரைப்படம் ஒரு திரில்லர் க்ரைம் ஸ்டோரி ஆகும். இதனிடையே ட்ரெய்லரை பார்க்கும் பொழுது அடுத்து என்ன நடக்க போகிறது என்று ஆர்வத்தை தூண்டும் வகையில் விறுவிறுப்பான திரைப்படம் போல தெரிகிறது. இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் ஷாம் சி எஸ் இசை இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் திரைப்படத்தில் நடிகர் உதயநிதியுடன் இணைந்து பிரசன்னா, ஸ்ரீகாந்த், ஆத்மிகா போன்ற பிரபலங்களும் இத்திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். ஒரு வகையில் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்படுத்தினாலும் உதயநிதியின் ரசிகர்களுக்கு இது உதயநிதியின் கடைசி திரைப்படம் என்ற ஏக்கமும் இருக்கும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top