சினிமா

முடிவுக்கு வந்தது சூர்யா ரசிகர்களின் கனவு படம்.. சிறுத்தை சிவாக்காக வெற்றியை காவு வாங்கிய நடிப்பின் நாயகன்

நடிகர் சூர்யா வித்தியாசமான கதை களங்களை தேர்வு செய்து நடித்துப் பெயர் பெறுவதில் வல்லவர். சூர்யா டாப் இயக்குனர்களுடன் நடித்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுக்க வேண்டும் என்பதே அவர்களது ரசிகர்களின் கனவாகும். இந்த நிலையில் அசுரன், வடசென்னை போன்ற படங்களை எடுத்து இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குனர் வெற்றிமாறனுடன் சூர்யா வாடிவாசல் என்ற படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் அறிவிப்பு வந்ததும் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் திழைத்தனர்.

Advertisement

இந்த படத்திற்காக சூர்யா ஜல்லிக்கட்டு பயிற்சிகளை மேற்கொண்டார். ஆனால் திடீரென்று இந்த படம் தள்ளிப் போகும் என்று அறிவிப்பு வெளியானது. வெற்றிமாறன் விடுதலை என்ற படத்தில் தீவிரமாக இறங்கி வேலை செய்து வருவதால் அடுத்த படத்திற்கான வேலையை அவர் தொடங்கவில்லை என்று காரணம் கூறப்பட்டது. இந்த நிலையில் வெற்றிமாறன் தெலுங்கு திரைப்பட இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

அப்போது வாடிவாசல் படம் என்னானது என்ற கேள்விக்கு பதில் அளித்த வெற்றிமாறன், சூர்யா இந்த படத்திற்காக கடும் பயிற்சி எடுக்க உள்ளதால் அதுக்கு மூன்று ஆண்டுகள் ஆகலாம் என்று முதலில் காரணம் கூறினார். எனினும் வாடிவாசல் படத்தில் நடித்த சூர்யா ஆர்வம் காட்டி பயிற்சியில் இறங்கினாலும், வெற்றிமாறன் தாமதப்படுத்தியதால் கோபத்தில்  சிறுத்தை சிவா உடன் பெரிய ப்ராஜெக்ட் ஒன்றில் இறங்கி விட்டார். அந்த படம் 10 மொழிகளில் 3டி படமாக சிறுத்தை சிவா இயக்குகிறார்.

Advertisement

இந்த படத்தை முடிக்க குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம். அந்த காலகட்டத்தில் வெற்றிமாறன் விஜயை வைத்து ஒரு ஆக்சன் படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் வாடிவாசல் படத்தை மீண்டும் தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. வெற்றிமாறன் சூர்யா ஆகிய இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதால் அந்த படம் கைவிடப்படும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top