சினிமா

பகத் பாசிலா? அது யாரு? எனக்கு தெரியவே தெரியாது- வடிவேலு போட்ட குண்டு..அதிர்ந்த மாரி செல்வராஜ்

இயக்குனர் மாரி  செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி மாமன்னன் என்ற திரைப்படம் நடித்திருக்கிறார்.  அரசியலில் ஈடுபட்டு பணியாற்றி வரும் உதயநிதிக்கு சினிமாவில் நடிக்கும் கடைசி படமாக இந்த மாவட்ட திரைப்படம் அமைந்திருக்கிறது.

Advertisement

இந்தத் திரைப்படம் ரெட் ஜெயின்ஸ் நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் நேற்று இணையத்தில் வெளிவந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த திரைப்படத்தில் முற்றிலும் புதுமையான கதாபாத்திரத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்திருக்கிறார். அதிலும் நேற்று வெளிவந்த அந்த பாடலை நடிகர் வடிவேலு தான் பாடி இருக்கிறார்.

வடிவேலுவின் குரலில் ஏ ஆர் ரகுமானின் இசையில் வெளி வந்திருக்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் வில்லனாக பகத் பாசில் நடித்திருக்கிறார். நேற்று யூடியூப் சேனல் ஒன்றில் பேட்டி எடுக்கப்பட்டபோது இந்த திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது கடந்த ஒரு சில நிகழ்வுகளைப் பற்றி கூறியிருந்தார்.

Advertisement

அது வடிவேலுவிடம் இந்த திரைப்படத்தின் வில்லனாக பகத் பாசில் நடிக்க இருக்கிறார் என்று கூறிய போது எனக்கு பகத் என்று யாரையுமே சினிமாவில் தெரியாது என்று கூறிவிட்டாராம். அதிர்ந்து போன மாரி செல்வராஜ் மலையாள இயக்குனர் பாசிலின் மகன் மகன்தான் பகத்வாசல் என்று கூறி பகத் பாசில் நடித்த சில படங்களையும் கூறினேன்.

இவர்தான் இவரை எனக்குத் தெரியும். ஆனால் பெயர் சரியாக தெரியவில்லை என்று கூறி வடிவேலு சமாளித்த்தாக மாரி செல்வராஜ் கூறியிருந்தார்.

ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் படத்தில் நடிக்க தொடங்கிய பிறகு அதிகமாக அரட்டை அடித்தது பகத் பாசிலும் வடிவேலும் தான் என்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்த பேட்டியில் இந்த திரைப்படத்தின் நடிகர் லால் நடித்து இருக்கிறார் என்பதையும் குறிப்பிட்டார்.இந்த திரைப்படத்தில் நடிகர் லாலுக்கு குறுகிய நேரம் தான் அவருடைய கதாபாத்திரம் இருந்தாலும் இந்த திரைப்படத்தின் நடிப்பை  அவரை விரும்பி நடித்தார் என்றும் கூறியிருந்தார் .

Advertisement

உதயநிதி ஸ்டாலின்,வைகைப்புயல், வடிவேலு, நடிகர் லால் நடிகை கீர்த்தி சுரேஷ் ,இயக்குனர் மாரி செல்வராஜ் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இவர்கள் அனைவருமே இந்த திரைப்படத்தில்  முதன் முதலாக இணைந்து இருக்கிறார்கள். இந்த கூட்டணி முற்றிலும் புதுமையானது. இதனால் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top