Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய் படத்திற்கு முதல் முறையாக ஏற்பாடு.. கடைசி நேரத்தில் தில் ராஜூவின் மாஸ்டர் ஸ்டோர்க்

விஜய் படத்திற்கு முதல் முறையாக ஏற்பாடு.. கடைசி நேரத்தில் தில் ராஜூவின் மாஸ்டர் ஸ்டோர்க்

- Advertisement -

தமிழகத் திரைப்படம் ரசிகர்களுடைய மிகவும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் நாளை முதல் திரையிடப்படுகிறது. இந்தப் படத்திற்கான முன்பதிவு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் முதல் காட்சி தமிழகம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படும் என தயாரிப்பு குழு அறிவித்துள்ள நிலையில், தற்போது கடைசி நேர டிவிஸ்டாக மாஸ் அறிவிப்பு ஒன்றை தில் ராஜு வெளியிட்டுள்ளார்.

அதன்படி விஜய் சினிமா வாழ்க்கையில் முதல் முறையாக வாரிசு திரைப்படத்திற்கு நட்சத்திரங்கள், பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக் காட்சியை படம் ரிலீஸ் ஆவதற்கு முதல் நாளே திரையிட தில் ராஜு முடிவு செய்துள்ளார். இதற்காக இன்று சத்தியம் திரையரங்கில் வாரிசு திரைப்படத்திற்கான ஸ்பெஷல் ஷோ மாலை திரையிடப்படுகிறது. இதில் சினிமா நட்சத்திரங்கள் வாரிசு படத்தில் பணியாற்றியவர்கள் குடும்பங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

ஏற்கனவே துணிவு படத்திற்கு ஒரு நாள் முன்பே ஸ்பெஷல் ஷோவை ஏற்பாடு செய்ய போனி கபூர் முடிவெடுத்த நிலையில், அது நடைபெறாமல் போனது. எனினும் அஜித்தின் மனைவி மற்றும் போனி கபூர் ஆகியோர் மட்டும் சிறப்பு காட்சியை பார்த்தனர். ஆனால் தற்போது சாதூர்யமாக காய் நகர்த்திய தில் ராஜு, செலிப்ரிட்டி ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறார்.இதற்குக் காரணம் வாரிசு திரைப்படத்திற்கு முதல் நாள் முதல் காட்சியிலேயே மோசமான விமர்சனத்தை பரப்ப சிலர் திட்டம் தீட்டி இருக்கிறார்கள் என்ற தகவல் படக்குழுவிற்கு கிடைத்துள்ளது. முதல் காட்சியிலே படம் நன்றாக இல்லை என்று கருத்தை பரப்ப இருந்தது.

- Advertisement -

இதனை அடுத்து தற்போது முதல் காட்சியை சினிமா நட்சத்திரங்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் ஒளிபரப்பி விமர்சனங்களை ரிலீஸ்க்கு முன்பே ம அதிகாரப்பூர்வமாக வெளியிட தில் ராஜு முடிவெடுத்துள்ளார். இதன் மூலம் வாரிசு திரைப்படத்திற்கு எதிராக பரப்பப்படும் நெகட்டிவ் விமர்சனங்கள் முறியடிக்கப்படும் என்றும் படக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர். படம் ரிலீஸ் ஆவதற்கு முதல் நாளே சிறப்பு காட்சியை ஏற்பாடு செய்துள்ளதால் படத்தின் மீது அதிக நம்பிக்கையை தில் ராஜு வைத்திருக்கிறார் என்பது இது காட்டுவதாக சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

Most Popular