சினிமா

சூர்யாவை முந்திய தனுஷ்.. சாதனை படைத்த வாத்தி

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. அதாவது இரண்டாம் கட்ட நடிகர்களின் குறைந்த நாட்களில் 75 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்ற பெருமையை வாத்தி பெற்றிருக்கிறது. இதன் மூலம் நடிகர் தனுஷ் சூர்யாவை பாக்ஸ் ஆபீஸ் வசூல் ரீதியில் தனுஷ் முந்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

Advertisement

ஒரு காலத்தில் சூர்யாவுக்கு தமிழ்நாட்டை விட தெலுங்கில் அதிக வசூல் கிடைக்கும். உதாரணத்திற்கு சூர்யாவின் சிங்கம் படம் எல்லாம் தமிழில் விட ஆந்திராவில் அதிக வசூலை பெற்றது. எனினும் தொடர்ந்து சூர்யா பிளாப் படங்களை கொடுத்ததால் அவருடைய மார்க்கெட் வெகுவாக பாதிக்கப்பட்டது. சூர்யா கடைசியாக நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ஒட்டுமொத்தமாகவே 60 கோடி ரூபாய் வசூலை தான் படைத்தது.

இந்த நிலையில் தனுஷ் நடித்த வாத்தி திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் ரிலீசானது. இதில் வாத்தி திரைப்படம் எட்டு நாட்களில் 75 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்திருக்கிறது. இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் தமிழ்நாட்டை விட தெலுங்கில் தான் அதிக வசூலை தனுஷ் படம் பெற்றிருக்கிறது. தமிழகத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை. காரணம் படத்திற்கு கலவையான விமர்சனமும் பரீட்சை காலத்தில் படம் ரிலீஸ் ஆகி இருப்பதும் ஒரு காரணமாக கருதப்படுகிறது.

Advertisement

தற்போது அகிலன் தவிர வேறு எந்த திரைப்படமும் பெரியதாக வரவில்லை. இதனால் தனுஷ் படம் ஒட்டு மொத்தமாக 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைக்கும் என கருதப்படுகிறது. இந்த நிலையில் தெலுங்கில் படம் வெற்றிகரமாக ஓடியதற்கு காரணம்  தனுஷ் அந்த மாநிலத்திற்கு சென்று பட ப்ரொமோஷன் பணியில் ஈடுபட்டார்.இதன் காரணமாக அவருக்கு தற்போது நல்ல பலன் கிடைத்திருக்கிறது. இதனை முன்னணி நடிகர்கள் பலரும் செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  சூர்யாவின் 42வது படம் வாத்தி வசூலை இரண்டே நாட்களில் கடந்து விடும் என்று திரைப்பட வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top