சினிமா

தன்னம்பிக்கை பேச்சா? இல்ல ஓவர் பேச்சா? மேடையில் வெங்கி அட்லூரி விட்ட சவால்!

நமது ஊரில் இயக்குனர் அட்லி எப்படி மேடையில் பேசி சவால் விடுவாரோ அதேபோல் வாத்தி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி சவால் விடுத்திருக்கிறார். அட்லியின் பேச்சை அதிக தன்னம்பிக்கை என்று ரசிகர்கள் எடுத்துக் கொண்டனர். காரணம் அவருடைய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனது. ஆனால் வெங்கி அட்லூரியின் பேச்சு கொஞ்சம் ஓவர் பேச்சாக தான் பார்க்கப்படுகிறது.

Advertisement

ஏனென்றால் அறிமுகம் இயக்குனரான அவர் எடுத்த மிஸ்டர் மஞ்சு என்ற திரைப்படம் பிளாப் திரைப்படமாக ஆனது. எனினும் வெங்கி அட்லூரிக்கு தனுஷை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்க நல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தின் மீது தனுஷ் அதிக நம்பிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேடையில் பேசிய இயக்குனர் வெங்கி அட்லூரி தற்போது படங்கள் ஒரு வாரம் ஓடினாலே பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

ஆனால் வாத்தி திரைப்படம் தெலுங்கானாவில் நான்கு வாரமும் தமிழகத்தில் 8 வாரமும் வெற்றிகரமாக ஓடும் என பேசியுள்ளார். இதை தொடர்ந்து பேசிய அவர் வெளிநாட்டின் நிலைமை என்ன என்று எனக்கு தெரியாது. அதனால் அதை பற்றி நான் பேசவில்லை. ஆனால் வாத்தி திரைப்படம் இரண்டு மாநிலங்களும் செம ஹிட் ஆகும் என நம்பிக்கை எனக்கு இருக்கிறது .படத்தின் ஸ்பெஷல் ஷோ சென்னையில் திரையிடப்படுகிறது.

Advertisement

மேலும் ஹைதராபாத்தில் ஸ்பெஷல் ஷோக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதும் இதனை பார்க்கும் ரசிகர்கள் முதல் நாள் காட்சிக்கும் தங்களது டிக்கெட் முன்பதிவு செய்து பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. தனுஷ் திரையில் இருக்கும் போது நாம் மற்ற நடிகர்களை பார்க்கவே தோன்றாது. அந்த அளவுக்கு தனுஷின் பெர்ஃபார்மன்ஸ் இருக்கும். நான் அதீத தன்னம்பிக்கையில் தான் பேசுகிறேன்.ஏனென்றால் படம் நன்றாக வந்திருக்கிறது. தமக்கு இயக்குனர்கள்  மணிரத்தினமும் திருவிக்கிரமும் படமும் மிகவும் பிடிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top