Sunday, May 19, 2024
- Advertisement -
Homeசினிமாவிடாமுயற்சிக்கும் ஷூட்டிங்கிற்கும் ஒத்தே வராது போல.. அஜித்துக்கு எதிர்பாராமல் வந்த பிரச்சினை

விடாமுயற்சிக்கும் ஷூட்டிங்கிற்கும் ஒத்தே வராது போல.. அஜித்துக்கு எதிர்பாராமல் வந்த பிரச்சினை

நடிகர் அஜித்தும் விஜய்யும் பொங்கலுக்கு ஒன்றாக படத்தை வெளியிட்டார்கள். இது உலக அளவில் வாரிசு திரைப்படம் 310 கோடி ரூபாய் வசூலையும், துணிவு திரைப்படம் 191 கோடி ரூபாய் வசூலையும் பெற்று சாதனை படைத்தது.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் விஜய் லியோ திரைப்படத்தை தொடங்கி அதனை முடித்துவிட்டு தற்போது தளபதி 62 திரைப்படத்திற்கான சூட்டிங்கிற்கு சென்று விட்டார்
72 வயதான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட ஜெயிலர் திரைப்படத்தை முடித்து விட்டு அதன் பிறகு லால் சலாம் படத்தை சூட்டிங் முடித்துவிட்டு தற்போது 170-வது பழத்தின் சூட்டிங் க்கு சென்று விட்டார்.

அதன் பிறகு 171 வது திரைப்படத்தின் கதையும் தேர்வு செய்துவிட்டார். ஆனால் நடிகர் அஜித் வழக்கம்போல் தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு உலகத்தை சுற்றிவர சென்று விட்டார். இதற்கிடையில் இயக்குனர் மாற்றம் நடிகர்கள் மற்றும் என பல விஷயங்கள் நடந்து முடிவாக விடாமுயற்சி என்ற படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதாக செய்திகள் வெளியானது.

- Advertisement -

இந்த நிலையில் ஷூட்டிங் நடைபெறும் என்று ஆறு மாதங்களாக சொல்லப்பட்ட நிலையில் தற்போது அசர்பை ஜானில் ஷூட்டிங்கை தொடங்குவதற்காக விடாமுயற்சி பட குழு சென்றிருப்பதாக செய்திகள் வெளியானது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் கொண்டாடினர்.

- Advertisement -

ஒரு வழியாக சூட்டிங் தொடங்கிவிட்டது என்ற பெருமூச்சியில் நிம்மதியாக இருந்தனர். ஆனால் தற்போது தான் ஒரு புதிய பிரச்சனை அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. அசர்பை ஜானில் உள்நாட்டு கலவரம் ஒன்று வெடித்திருக்கிறது.

அங்கு இருக்கும் அர்மேனிய மக்களுக்கும் அசர்பைஜான் மக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் படபிடிப்பை விடாமுயற்சி பட குழு தொடர முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் விடாமுயற்சி பட குழு உடனடியாக சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக மேலும் ஒரு மாதம் ஷூட்டிங் தள்ளி போகலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி அஜித் ரசிகர்களை அதிர்ச்சியின் ஆழ்த்தியுள்ளது.

Most Popular