Sunday, May 19, 2024
- Advertisement -
Homeசினிமாமகளின் மரணத்தால், சாப்பிட, தண்ணீர் குடிக்க மறுக்கும் விஜய் ஆண்டனி..! நண்பர் வேதனை

மகளின் மரணத்தால், சாப்பிட, தண்ணீர் குடிக்க மறுக்கும் விஜய் ஆண்டனி..! நண்பர் வேதனை

தமிழ் திரையுலகில் தன் விளங்க முடியா வார்த்தைகளால் உருவாகும் பாடல்கள் மூலம் அனைவரையும் தாளம் போட வைத்திருப்பவர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி..முதலில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி; நாக்க முக்க, நூறு சாமிகள், ஆத்திச்சூடி ஜில்லாக்ஸ் , சாத்திக்கடி , இச்சு இச்சு இச்சு கொடு போன்ற பல பாடல்கள் மூலம் பிரபலமாகி ரசிகர்களை இன்றும் வைப் பில் வைத்திருப்பவர் விஜய் ஆண்டனி..!

- Advertisement -

அதன் பின்பு படங்களில் கதாநாயகனாக உருமாறினார். பிச்சைக்காரன், சாத்தான், சலீம் போன்ற படங்களில் நடித்து நடிப்பிலும் தனி முத்திரை பதித்தார்.
சமீபத்தில் பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் பொழுது , மலேசியாவில்  நடைபெற்ற  படப்பிடிப்பில் விபத்தில் சிக்கினார். மரணத்தை விளிம்பில் சென்று பார்த்து விட்டு திரும்பினார் விஜய் ஆண்டனி..

இவருடைய பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. ஆனால் இந்த மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிப்பதற்குள்  தன் அன்பு மகளான மீராவை பறி கொடுத்துவிட்டு மீளாதுயரில் தவித்து வருகிறார் விஜய் ஆண்டனி!!

- Advertisement -

தன்  தந்தையின் தற்கொலையால் !ஏழு வயது முதலே தன் குடும்பம் பட்ட வேதனையை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டதோடு யாரும் இத்தகைய தவறை செய்யக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்..  மற்றவர்களை ஊக்கப்படுத்துவதில் வல்லவரானவர் விஜய் ஆண்டனி. இன்று அவர் தன் மகளை அதேபோன்று பறிக்கொடுத்திருப்பது அனைவரையும் மன வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது.

- Advertisement -

விஜய் ஆண்டனியின் மகளான மீராவும் ,மிகவும் தைரியமானவர், ஆண்கள் உடை அணிவது போலவே அவரும் உடை அணிவாராம், கூட பழகும் நண்பர்கள் சோகத்தில் இருந்தால் அவர் மனம் தாங்காது  என்றும் உடனே அவருக்கு ஆறுதல் கூறி சாத நிலைக்கு மாற்றுவாராம்.!

அவர் மன உளைச்சலில் இருப்பது போன்று ஒருபோதும் தாங்கள் கண்டதில்லை என்று இறுதி அஞ்சலிக்கு வந்திருந்த ஆசிரியர்கள் மற்றும் அவர்கள் தோழிகள் கூறி கதறியது பெறும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது .. ஆனால் மீரா ஒரு வருடமாகவே மன உளைச்சலுக்காக சிறப்பு மருத்துவம் பெற்றதாக  செய்திகள் தெரிவிக்கின்றன..

மீரா இறுதியாக எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், லவ் யூ ஆல் ,மிஸ் யூ ஆல் என்றும்!நான் இல்லாமல் குடும்பமும்! குடும்பம் இல்லாமல் நானும் தவித்துப் போவோம் என்று குறிப்பிட்டு இருந்ததாக தகவல்கள் கசிந்துள்ளன .

தமிழ் திரை உலக நட்சத்திரங்கள் பலரும் இறுதி அஞ்சலியில் பங்கேற்று தம் வேதனைகளை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டனர்..பொது மக்களுக்கே இந்தச் சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், தன் அன்பு மகளை பறிகொடுத்து இருக்கும் விஜய் ஆண்டனியின் மனநிலையை நினைத்து கூட பார்க்க முடியவில்லை  ..

விஜய் ஆண்டனி நண்பரான நடிகர்  அருண்மொழி கூறுகையில், சம்பவம் நடந்த பின் விஜய் ஆண்டனி ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தவில்லை என்று கூறியிருப்பது பெரும் மன வேதனையை  அனைவருக்கும் ஏற்படுத்தி உள்ளது.

சாதாரண ஜுரம் குழந்தைகளுக்கு வந்தால் கூட விஜய் ஆண்டனி கண்ணீர் விட்டு துடித்து போவாராம் , அப்படி இருக்கும் பொழுது இந்த மீளா துயரத்தை மீரா ஏற்படுத்தி சென்றிருப்பதை, தாங்கிக் கொள்ளும் வலிமையை அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் இறைவன் தர வேண்டும் என்று பிரார்த்திப்பது மட்டுமே நம்மால் இயன்றது .

Most Popular