Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாமாவட்ட நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு! அரசியல் களம் காண்கிறாரா தளபதி விஜய் ?

மாவட்ட நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு! அரசியல் களம் காண்கிறாரா தளபதி விஜய் ?

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு அதிகமான ரசிகர்களை கொண்ட தமிழ் சினிமா நடிகர் இவர் என்றால் அது மிகையாகாது . தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் .. இந்தத் திரைப்படம் இவருடைய இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் ஸ்டாருக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ என்றால் அது தளபதி விஜய் தான் . இவரது திரைப்படத்தின் ஓப்பனிங் காட்சிகள் அதற்கு சான்று. தனக்கென மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்தையே வைத்திருப்பவர் விஜய்.

- Advertisement -

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய ரசிகர் மன்றங்களை எல்லாம் மக்கள் இயக்கமாக மாற்றி பொது மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் தளபதி விஜய். அப்போதிருந்தே விஜய் அரசியலுக்கு வருவார் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது . அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளும் அரசியல் நகர்வுக்கான நடவடிக்கைகளாகவே பார்க்கப்பட்டது . வெகு விரைவிலேயே அரசியலுக்கு வரும் முடிவில் தான் இருக்கிறார் தளபதி விஜய் என்று கோடம்பாக்கம் வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகளும் அதை நிரூபிப்பது போலவே இருக்கிறது .

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மாவட்டம் தூரம் உள்ள அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . இது டாக்டர் அம்பேத்கருக்கு செய்யப்பட்ட மரியாதையாக பார்க்கப்பட்டாலும் பெரும்பாலான விமர்சகர்கள் இதனை ஒரு அரசியல் நகர்வாகவே பார்க்கின்றனர் தளபதி விஜய் அரசியலில் வருவதற்காக எடுக்கப்படும் மின்னோட்டங்களாகவே இவை பார்க்கப்படுகின்றன

- Advertisement -

மேலும் தற்போது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புதிய உத்தரவு பொறந்திருக்கிறது . அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வாக்காளர்களின் விவரங்களை மாவட்ட வாரியாக சேகரித்து வைக்குமாறு தலைமையில் இருந்து கேட்டுக்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வாக்காளர் பற்றி விவரங்களை தெரிந்து கொள்வதற்காக மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜய்யிடம் இருந்து உத்தரவு சென்றுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகி இருக்கிறது

- Advertisement -

மேலும் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்ற தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் களம் கண்டனர் . அந்தத் தேர்தலில் தனது பெயரை பயன்படுத்திக்கொள்ள விஜய் அனுமதி கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது . தற்போது மாவட்ட நிர்வாகிகளுக்கு வாக்காளர்களைப் பற்றி விவரங்களை சேகரிக்கும் உத்தரவு சென்றுள்ளதால் வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய் நிச்சயமாக களமிறங்குவார் என விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர் . இதனால் தமிழக அரசியலில் புதிய சூழல் உருவாகும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Most Popular