Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாகுடும்பம் பிரிந்ததற்கு வனிதா தான் காரணம்... விஜயகுமார் பேத்தி திருமணத்தில் அலங்காரம் செய்த பெண் கூறிய...

குடும்பம் பிரிந்ததற்கு வனிதா தான் காரணம்… விஜயகுமார் பேத்தி திருமணத்தில் அலங்காரம் செய்த பெண் கூறிய உண்மை..!

சமீபத்தில் இணையத்தில் வைரலாக இருந்தது நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமண வைபோகம் தான்.

- Advertisement -

நடிகர் விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு, மஞ்சுளா என்று இரண்டு மனைவிகள் இருந்த நிலையில் முதல் மனைவியான முத்துக்கண்ணுக்கு அனிதா, கவிதா, நடிகர் அருண் விஜய் என்று மூன்று பிள்ளைகளும் .மஞ்சுளாவிற்கு வனிதா பிரீத்தா, ஸ்ரீதேவி என்ற மூன்று மகள்களும் இருக்கிறார்கள் .நடிகை மஞ்சுளா மறைந்த பிறகும் அனிதா, கவிதா ,அருண் விஜய், ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய ஐந்து பிள்ளைகளும் நடிகர் விஜயகுமார் மற்றும் அவர் மூத்த மனைவி முத்துக்கண்ணுடன் ஒரே குடும்பமாக ஒத்துமையாக வாழ்ந்து வருகிறார்கள்.

இதில் நடிகர் விஜயகுமாரின் முதல் தாரத்து மனைவியின் மகளான அனிதாவின் மகளுக்கு சமீபத்தில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது அதில் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் இணையத்தில் வெளிவரும் நிலையில் ஊரே கண் வைக்கும் அளவிற்கு அவர்களின் ஒற்றுமை பேசப்பட்டு வருகிறது .

- Advertisement -

இது போன்ற பிரபலங்களின் வீட்டு நிகழ்வுகளில் மேக்கப், மெஹந்தி போன்றவற்றில் பங்கெடுத்தவர்களை பேட்டி எடுப்பது கலாட்டா போன்ற சேனல்களின் வழக்கமாகும். அந்த வகையில் தற்பொழுது தியா திருமணத்தில் மேக்கப் செய்தவர்களையும் ,மெஹந்தி போட்டவர்களையும் பேட்டி எடுத்து இருக்கிறார்கள் கலாட்டா சேனல்.

- Advertisement -

அதில் அவர்கள் அந்த குடும்பத்தை பற்றி கூறியது இப்படியும் குடும்பங்கள் இருக்கிறதா என்று ஆசைப்படும் அளவிற்கு இருக்கிறது. தியாவின் திருமணத்தின் முகூர்த்தத்திற்கு அலங்காரம் செய்த மேக்கப் ஆர்டிஸ்ட் அந்த குடும்பத்தில் யாருமே கோபப்படவில்லை. அப்படியே ஏதாவது கோபம் வந்தால் கூட இல்லடா அம்மா, சரிடா மா என்று செல்லமாக தான் பேசுகிறார்கள். அதைப் பார்க்கும்பொழுது நாமும் இப்படி எல்லாம் மாற வேண்டும் என்று எனக்குத் தோன்றியது .எல்லாருமே அந்த குடும்பத்தில் பண்போடு நடந்து கொள்கிறார்கள்.

நடிகர் அருண் விஜய் தியாவிற்கு தாய் மாமன் ஆவர் .சினிமாவில் தான் தாய்மாமன் தன் சகோதரி மகள்கள் மீது சொந்த மகளை போல் பாசம் காண்பிப்பதும் செய்முறைகள் செய்வதையும் பார்த்து இப்படி எல்லாம் நிஜத்தில் இருக்கப் போகிறார்கள் என்று நினைப்போம். ஆனால் அந்த எண்ணத்தை சுக்கு நூராக்கிவிட்டார் நடிகர் அருண் விஜய் அவர் தாய்மாமாக கிடைக்க அவர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அந்த அளவிற்கு திருமணத்தில் ஈடுபட்டு எல்லா நன்மைகளையும் செய்து வருகிறார். அவருடைய மனைவி ஆர்த்தியும்  சற்றும் சலிக்காமல் இந்த குடும்பத்திற்கு வேண்டியவற்றை பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

அதேபோல் முதல் மனைவியின் மகள்கள் இரண்டாவது மனைவியின் மகள்கள் என்ற பாரபட்சம் இன்றி அனிதா, கவிதா, ஸ்ரீதேவி, பிரீத்தா, அருண் விஜய் ஆகிய ஐந்து பேரும் உடன் பிறந்த சகோதர சகோதரிகளாகவே வாழ்ந்து வருகிறார்கள். இதை பார்த்தால் யாராக இருந்தாலும் கண் வைத்து விடுவார்கள். அந்த அளவிற்கு அவர்கள் உடைய நெருக்கம் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள்.

அதேபோல் மணப்பெண் தியாவும் கொஞ்சம் கூட அகம்பாவம் இன்றி பண்பாக பேசி தன்னுடைய அலங்காரத்திற்கு ஒத்துழைத்ததாக தியாவிற்கு அலங்காரம் செய்தவர்களும், மெஹந்தி போட்டவர்களும் கூறி இருக்கிறார்கள் .அவர்கள் முழுமையாகவே தமிழ் பண்பாட்டை தான் நேசித்து அந்து போன்று ஒரு லுக் தான் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுடன் பிறந்த வனிதா இந்த குடும்பத்தை விட்டு பிரிக்கப்பட்டு விட்டார். இதற்கு இவருடைய செயல்பாடுகளை காரணமாக இருக்கும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஒட்டுமொத்த குடும்பமும் பண்பாக இருக்கும் நிலையில் நடிகை வனிதாவை பற்றி அனைவருக்குமே தற்பொழுது தெரிந்திருக்கும் வனிதா வளர்த்த ஜோவிகா பிக்பாஸில் நடந்து கொண்ட விதத்தையும் தற்பொழுது அனிதாவின் மகள் தியா நடந்து கொண்டதாக கூறும் விதத்தையும் பலரும் ஒப்பிட்டு வனிதாவின் மீது தான் தப்பி இருக்கும் என்று கூறுகிறார்கள்.

Most Popular