Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய் வர்மா - தமன்னா காதல் திருமணம்.. ! அழுத்தம் கொடுக்கும் பெற்றோர்.. !

விஜய் வர்மா – தமன்னா காதல் திருமணம்.. ! அழுத்தம் கொடுக்கும் பெற்றோர்.. !

அண்மையில் மிகப் பெரிய கம்பேக்கை கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள நடிகை தமன்னா பாட்டியா. இவரது படங்கள், வெப் சீரிஸ், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி இணையத்தை உலுக்கி வருகிறது. இதற்கிடையே அவரது காதல் கதையும் அடங்கும்.

- Advertisement -

ஹாட்டானா ஹீரோயினாக மாறிய தமன்னா

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்துவரும் தமன்னா வழக்கமாக ஹாட்டான காட்சிகளில் நடிப்பதை விரும்பாதவர். ஆனால் தற்போது அனைத்தையும் ஒட்டுமொத்தமாக மாற்றி புதிய தமன்னாவாக வந்துள்ளார்.

முதலில் ஜீ கார்டா எனும் புதிய வெப் சீரிஸில் ஹீரோவுடன் மேலாடை இல்லாமல் நெருக்கமாக இருக்கும் காட்சி மிகவும் வைரலானது. இந்து தவிர்த்து இன்னும் சில காட்சிகளும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து லஸ்ட் ஸ்டோரிஸ் 2விலும் இதே போலவே நடித்திருந்தார்.

- Advertisement -

இந்த 2 வெப் சீரிஸின் மூலம் பெரிய கவனத்தை ஈர்த்துள்ளார். இதே வேகத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் ‘ காவாலா ’ எனும் பாடலுக்கு நடனம் ஆடினார். அதே போல ஹிந்தியிலும் ‘ மில்க்கி ப்யூட்டி ’ ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.

- Advertisement -

தமன்னாவின் காதல் கதை

லஸ்ட் ஸ்டோரிஸ் சீரிஸில் நடிக்கும் போது ஹீரோ விஜய் வர்மாவின் காதல் வலையில் விழுந்துள்ளார் தமன்னா. கதாபாத்திரத்திற்கு இடையே இருந்த கெமிஸ்ட்ரி இருவரது நிஜ வாழ்க்கையிலும் வொர்க் அவுட் ஆகியுள்ளது. பல மாதங்களாக காதலித்து வரும் அவர்கள் சமீபத்தில் லஸ்ட் ஸ்டோரிஸ் ரீலீசுக்கு பின்னரே அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

விஜய் வர்மா தன் மேல் மிகவும் பாசமாக இருப்பதாகவும் இவரைப் போல ஒருவைக்காகத் தான் இத்தனை வருடங்கள் காத்திருந்ததாகவும் கூறியுள்ளார் தமன்னா. காதலின் அடுத்தக் கட்டமாக திருமணம் குறித்து பல கேள்விகள் அவர்களின் முன் வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி தமன்னாவின் காதலன் விஜய் வர்மா பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, “ திருமணத்தைக் குறித்து எனது பெற்றோர்களும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். எங்கள் மார்வாடி சமூகத்தில் ஆணுக்கு 16 வயது ஆகிவிட்டலே திருமணத்தைப் பற்றி பேச துவங்கிவிடுவர். நான் நடிகர் ஆனதால் அது பெரிதாக பாதிக்கவில்லை. தற்போது தமன்னாவை காதலிப்பதாக பெற்றோர் தொடர்ந்து கேட்டுகொண்டே வருகின்றனர். ” என்றார்.

Most Popular