Wednesday, May 15, 2024
- Advertisement -
Homeசினிமாரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாரே இல்லை .. மனம் திறந்து பேசிய விக்ராந்த்..!

ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாரே இல்லை .. மனம் திறந்து பேசிய விக்ராந்த்..!

லால் சலாம் திரைப்படத்தின் உடைய ட்ரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது அதில் கலந்து கொண்ட லால்  சலாம் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான விக்ராந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அவர் கடந்து வந்த அனுபவங்களை பற்றி கூறியிருந்தார்.

- Advertisement -

லால் சலாம் திரைப்பட படப்பிடிப்பு நடக்கும் பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் விக்ராந்த் உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும் கேட்கலாமா என்று கேட்டாராம் .அதற்கு சூப்பர் ஸ்டார் கேளுங்கள் என்றதும் எதையாவது யோசித்துக் கொண்டே இருக்கிறீர்களே ஏன் என்று கேட்டேன் .

அதற்கு அவர் இந்த சாட்டை எடுப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்று கேட்டார். நான் சின்ன சீக்குவன்ஸ் தான் ஒரு மணி நேரத்திற்குள் எடுத்து விடுவார்கள் என்று கூறினேன்.

- Advertisement -

அதற்கு அவர் இந்த ஒரு மணி நேரத்தில் 10 வினாடியை கூட நாம் வீணடித்து விடக்கூடாது. நம் வாழ்நாள் முடிந்த பிறகும் நம் நடித்த திரைப்படங்கள் இருக்கும். என்னுடைய குரு பாலச்சந்தர் இந்த காட்சியை நான் சொல்வது போல் யார் வேண்டுமானாலும் நடித்து விடலாம் ஆனால், இதில் ரஜினி என்ன செய்திருக்கிறார். அவருடைய ஸ்டைல் என்ன .இவர் அதற்காக என்ன பங்கெடுத்திருக்கிறார் என்பதை தான் பார்க்க வேண்டும் .

- Advertisement -

அதற்காக சிந்திக்க வேண்டும் என்று என் குரு எனக்கு கூறுவார். அதை நான் இன்று வரை கடைபிடித்து வருகிறேன் என்று சூப்பர் ஸ்டார் கூறியதாக விக்ராந்த் குறிப்பிட்டார்.

அதேபோல் அப்பொழுதுதான் நான் உணர்ந்தேன். இவர் சூப்பர் ஸ்டாராக இல்லை .எப்பொழுதும் பாலச்சந்தரின் சிசியன் ஆகத்தான் இருக்கிறார் என்பதை என்று கூறினார் நடிகர் விக்ராந்த்

மேலும் அவர் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற மிதப்பில் இருந்ததே இல்லை .ஏதோ ஒரு நான்கைந்து படங்கள் பண்ணியவர்கள் இன்னும் அதில் பெஸ்டாக நடிக்க வேண்டும். அடுத்து என்ன செய்வது அடுத்து பெஸ்டாக எப்படி நடிப்பது என்று எண்ணுவது போல தன்னுடைய திறமையை மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

எனக்கு இயல்பாக வாழ்வில் நிறைய தாழ்வு மனப்பான்மை உண்டு .எனக்கு எதுவும் சரியாக வராது என்று நான் நினைப்பேன் .ஆனால், தற்பொழுது நான் நடித்த இந்த திரைப்படத்தில் என்னை இரண்டு ,மூன்று தடவை சூப்பர் ஸ்டார் என்னை அருகில் அழைத்து கட்டிப்பிடித்து உனக்கு நன்றாக நடிப்பு வருகிறது என்று பாராட்டி இருக்கிறார். இது என் வாழ்க்கையிலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிற கலைஞர்களைப் பாராட்டுவதற்கு ஒருபோதும் அவர் யோசிப்பதில்லை என்று சூப்பர் ஸ்டாரின் உயர்ந்த குணங்களை வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் விக்ராந்த்.

அதேபோல் அந்த மேடையில் என்னை இந்த திரைப்படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் அனுமதித்ததற்கு மிகவும் நன்றி என்றும் நடிகர் விக்ராந்த்  கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Popular