Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாஅஜித்துடன் மீண்டும் ஓர் படம்.. ? ஆள விடுங்கடா சாமி என அலறி அடுத்து ஓடிய...

அஜித்துடன் மீண்டும் ஓர் படம்.. ? ஆள விடுங்கடா சாமி என அலறி அடுத்து ஓடிய இயக்குனர் சிவா.. என்ன காரணம்.. !

ஒரு காலத்தில் விஜய்க்கு எப்படி அட்லீயோ அவ்வாறு அஜித்துக்கு இயக்குனர் சிவா இருந்தார். இருவரும் இணைந்து வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என நான்கு படங்களை செய்துள்ளனர். இதில் விவேகம் மட்டுமே எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை, மற்ற படங்கள் பரவாயில்லை.

- Advertisement -

குறிப்பாக விசுவாசம் மிகவும் சென்டிமென்ட் கொண்ட பெரிய வெற்றித் திரைப்படம். உடன் ரீலீஸான தலைவர் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தையே மோதலில் வென்றது. இப்படத்திற்குப் பின்னர் அஜித் வினோத்தின் இயக்கத்தில் மூன்று படங்கள் நடித்தார். மறுபக்கம் சிவா இன்னுமும் சூர்யாவை வைத்து ‘ கங்குவா ’ படத்தை இயக்கி வருகிறார்.

அண்மையில் கார்த்தியின் 25வது படமான ஜப்பானின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நட்சத்திரங்களில் இயக்குனர் சிவாவும் ஒருவர். அவரிடம் செய்தியாளர்கள், “ அஜித்துடன் நீங்கள் மீண்டும் படம் செய்வதாக கூறுகிறார்கள். அது எப்போது ” என்ற கேள்வி சிவாவிடம் எழுப்பப்பட்டது.

- Advertisement -

அதற்கு சிவா எந்த பதிலும் கூறாமல் கையெடுத்து கும்பிட்டுவிட்டு மேடையில் இருந்து இறங்கினார். இது சமூக வகைதங்களில் வைரலாகியுள்ளது. ஒரு குழுவினர் ஏன் சிவா அப்படி செய்தார், அவருக்கும் அஜித்துக்கும் சண்டையா என்ற வதந்திகளை பரப்பத் துவங்கிவிட்டது. இதற்கு காரணம் பல அஜித் ரசிகர்களே சிவாவின் படங்களை அதிகம் கலாய்த்து விட்டனர். ஆனால் உண்மையில் சண்டையெல்லம் இல்லை.

- Advertisement -

தற்போது அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நது வருகிறார். சிவா சூர்யாவின் கங்குவா படத்தில் பிஸியாக இருக்கிறார். அடுத்து அஜித் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைகிறார். சிவாவின் அடுத்தப் படம் குறித்து எந்தவித தகவலும் இல்லை. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா – அஜித் கூட்டணி மீண்டும் இணைகிறார்கள் என சில மாதங்கள் முன்பு சித்திகள் பரவின. ஆனால் அவை எதுவுமே உண்மை அல்ல.

Most Popular