Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமா"10 வருடங்களுக்கு பிறகு நடந்த சம்பவம் இனி ஒவ்வொன்றாக வெளிவரும்" - தளபதி விஜயின் தந்தை...

“10 வருடங்களுக்கு பிறகு நடந்த சம்பவம் இனி ஒவ்வொன்றாக வெளிவரும்” – தளபதி விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் பேட்டி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளக்கி வருபவர் தளபதி விஜய் . இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கம் லியோ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் . இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் முதற்கட்டமாக காஷ்மீரில் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் வைத்து நடைபெறும் என படக் குழு அறிவித்திருக்கிறது . வாரிசு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது . வெறும் லோகேஷ் கனகராஜ் உடன் இரண்டாவது முறையாக விஜய் இணைந்து இருப்பதால் ரசிகர்கள் இந்த திரைப்படத்தினை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .

- Advertisement -

சில காலங்களாகவே தளபதி விஜய் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . கடந்த சில ஆண்டுகளாகவே அவரது தந்தை மற்றும் உன்னால் இயக்குனர் ஆன எஸ் ஏ சந்திரசேகர உடன் முதல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன . தனது மக்கள் இயக்கம் விழாவின் போது கூட தாய் தந்தையை விஜய் கவனிக்கவில்லை என்ற ஒரு விமர்சனம் பரவலாக அவர் மீது வைக்கப்பட்டது . இந்நிலையில் அவரது பெற்றோரின் ஐம்பதாவது திருமண நாளை முன்னிட்டு அவர்களை சர்ப்ரைஸாக விசிட் செய்திருக்கிறார் தளபதி .

விஜய் மற்றும் அவரது தாய் சோபனா இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. இந்தப் புகைப்படங்களிலும் ஒரு சில பத்திரிகையாளர்கள் சர்ச்சையை கிளப்பினர் . தாயுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஜய் ஏன் தந்தையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளவில்லை அப்படியானால் இருவருக்கும் இடையே மோதல் இருப்பது உண்மைதான் என்பது போன்று சிலர் கருத்து தெரிவித்து வந்தனர் . இதுபோன்ற செய்திகளால் கோடம்பாக்கத்தில் சலசலப்பு ஏற்பட்டது . இதற்கெல்லாம் பதிலடி கொடுத்திருக்கிறார் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் . இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது மகனுடான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் பேசியிருக்கிறார் .

- Advertisement -

இது பற்றி பேசி இருக்கும் எஸ்.ஏ சந்திரசேகர்” மீடியாக்கள் ஒருவர் தப்பு செய்யும் போது அவரை கேள்வி கேட்கலாம் மேலும் ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கும் போதும் அவரிடம் கேள்வி கேட்கலாம் . என்று தெரிவித்தார் . தொடர்ந்து பேசிய அவர் எங்களது மகன் 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார் . இது எங்களின் மிகவும் மகிழ்ச்சியான தருணம் . இதுவே எங்களுக்கு மிகப்பெரிய பாக்கியமாக நினைக்கிறோம் . விஜய் அவரது தாயுடன் எடுத்தது மற்றும் நீங்கள் பார்த்தது ஒரு புகைப்படம் தான் . இதுபோன்ற பத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் அன்று எடுக்கப்பட்டது . அவை ஒவ்வொன்றாக வெளியே வரும் . நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் . என்ன தெரிவித்திருக்கிறார் எஸ..ஏ சந்திரசேகர்.

- Advertisement -

எஸ் ஏ சந்திரசேகரின் இந்த பேட்டி சமீப காலமாக விஜயகுமார் இருக்கு மோதல் என்ற கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்திருக்கிறது . விஜயவருக்கு தந்தை சினிமா உட்பட அனைத்து விஷயங்களிலும் மூக்கை நுழைத்து வருவதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால் விஜய் பெற்றோரை பிரிந்து சென்றதாகவும் ஒரு தகவல் கோடம்பாக்கத்தில் நிலவி வந்தது . தற்போது எஸ் ஏ சந்திரசேகர் அளித்திருக்கும் பேட்டி அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருக்கிறதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Most Popular