Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாசன் டிவியின் கண்ணீர் அஞ்சலி! கடைசி எபிசோடில் குரல் இல்லை..மாரிமுத்து மறைவால் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களும்...

சன் டிவியின் கண்ணீர் அஞ்சலி! கடைசி எபிசோடில் குரல் இல்லை..மாரிமுத்து மறைவால் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களும் சோக கடலில்!

நடிகர் மாரிமுத்து என்றால் தெரியாதவர்கள் கூட உண்டு. எதிர்நீச்சல் “ஆதி குணசேகரன்” என்றால் சிறு குழந்தையை கேட்டால் கூட அக்கு அக்காக சொல்லி விடுவார்கள்.அந்த அளவுக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் அதிகார குரலால் ஆட்சி செய்தவர் ஆதி குணசேகரன்.

- Advertisement -

எதிர் நீச்சல் தொடரில் தான் இவர் முதல் முதலில் நடித்தாரா என்றால் இல்லை. தேனி மாவட்டத்தில் ஒரு மலை கிராமத்தில் வறுமையில் வாழ்ந்து பொறியாளராக படிப்பில் உயர்ந்தவர் மாரிமுத்து. பின்பு தமிழ்  மீது இருந்த காதலால் கவிஞர் வைரமுத்துவுக்கு உதவியாளராக மூன்று வருடங்கள் பணிபுரிந்துள்ளார்.

இதனைடுத்து இயக்குனர் வசந்த், எஸ் ஜே சூர்யா, சீமான் ,ராஜ்கிரண் போன்ற இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ள மாரிமுத்து,  பிரசன்னா வடிவேலு நடித்த கண்ணும் கண்ணும் என்ற படத்தை முதன் முதலில் இயக்கினார்.

- Advertisement -

பின்பு விமல், அனன்யா நடித்த புலிவால் படத்தை இயக்கினார்.
அதன் பின்பு  திரையில் தோன்ற ஆரம்பித்த மாரிமுத்து தன் எதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தார். பட வாய்ப்புகளும் அவரை தேடி ஓடி வந்தன‌. கடைசியாக வெளியான ஜெய்லர் படம் வரை அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததில்லை என்று அவருக்கு நற்பெயரை வாங்கி வந்தது..

- Advertisement -

அதன் பிறகு தான் தன்னுடைய புகழை உச்சத்திற்கு கொண்டு சென்ற எதிர்நீச்சல் தொடரில் நீந்த ஆரம்பித்தார் மாரிமுத்து! அதன் பிறகு மாரிமுத்து என்ற பெயர் மறந்து ஆதி குணசேகரன் என்பதே அவருடைய பேராகி போனது.! கிராமம்  முதல் நகரம் வரை அனைத்து வயது ரசிகர்களும் ரசிக்கும் கதாபாத்திரமாக மாறினார்.

சின்னத்திரை நடிகரை அதுவும் வில்லன் நடிகரை மக்கள் கொண்டாடத் தொடங்கியது
இதுவே முதல் முறையாகும்.
இப்படி அனைவரையும் தன் நடிப்பினால் கவர்ந்த மாரிமுத்து தற்போது இவ்வுலகில் இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது.

காலையில் இறுதியாக எதிர்நீச்சல் தொடரின் டப்பிங் பணிக்காகத்தான் ஸ்டுடியோவிற்கு சென்றுள்ளார் மாரிமுத்து. சிறிது நேரம் டப்பிங் பேசியவர் பின்பு தனக்குள் ஏதோ ஒரு அசௌகரியத்தை உணர்ந்துள்ளார். அதனைக் கண்ட நடிகர்  கமலேஷ், என்ன செய்கிறது ?என்று கேட்டுள்ளார்.

அதற்கு மாரிமுத்து, டப்பிங் அறையில் ஏசி இல்லாமல் இருப்பதால் வியர்வையாக இருக்கிறது .இது வழக்கமாக ஏற்படுவது தான் என்று கூறி வெளியில் சென்றுள்ளார்.
அதன் பின்பு ஸ்டுடியோவை விட்டு வெளியேறி அருகிலுள்ள சூர்யா மருத்துவமனைக்கு தானே கார் ஓட்டி சென்றுள்ளார்.!

இதற்கிடையில் தன் மனைவிக்கு போன் செய்து ரெடியாகி வா !காவேரி மருத்துவமனைக்கு செல்லும் நிலை நேரிடலாம் !என்று தகவல் தெரிவித்துள்ளார்.
. ஆனால் சூரியா ஹாஸ்பிடல் வாசலிலேயே அவருடைய உடல்நிலை மிகவும் மோசம் அடைந்து , மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக நடிகர் கமலேஷ் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்..

கடந்த வாரங்களில் தான் எதிர் நீச்சல் தொடரில் ஆதி குணசேகருக்கு நெஞ்சு பலி வருவது போல் காட்சிகள் அமைந்திருந்தன. அதற்கே மிகவும் வருத்தம் அடைந்த மக்கள், உண்மையாகவே மாரிமுத்துவிற்கு  மாரடைப்பு ஏற்பட்டதை எண்ணி அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்..தன் குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்ததைப் போன்று வேதனையில் எதிர்நீச்சல் நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் புலம்பி தவித்து வருகின்றனர் !!

இன்று சீரியல் தொடங்குவதற்கு முன்பே மாரிமுத்துவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சீரியல் குழு ஃபுல் வீடியோவை வெளியிட்டது. அதன் பிறகு மாரிமுத்துவிற்கு கண்ணீர் அஞ்சலி தெரிவிக்கும் விதமாக ஒரு ஸ்லைடையும் சன் டிவியில் ஒளிபரப்பினார்கள் .இன்று காலையில் தான் அவர் டப்பிங் கொடுத்துக் கொண்டிருந்தபோது பாதியிலே வெளியேறியதால் இன்றைய எபிசோடில் அவருடைய குரல் பாதி நிமிடங்கள் தான் வந்தது.

அதன் பிறகு வேறு யாரோ மாரிமுத்துவுக்கு அவரைப் போல் பேசி குரல் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.ஆனால் அது சரியாக பொருந்தவில்லை. அதனால் மாரிமுத்துவுக்கு பிறகு யார் நடிக்கப் போகிறார்கள் என்று கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Most Popular