Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாநடிகர் தனுஷ்- சுருதிஹாசன் உறவில் அப்படி என்ன இருந்தது ? சுருதிஹாசனே பதில் கூறியுள்ளார்.

நடிகர் தனுஷ்- சுருதிஹாசன் உறவில் அப்படி என்ன இருந்தது ? சுருதிஹாசனே பதில் கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவருடைய ஆரம்ப கால திரை உலக வாழ்வைப் பற்றி நாம் அனைவரும் அறிந்தது தான்,ஆனால் தற்போதைய சூழ்நிலைபடி இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாகவே அவருக்கு அமைந்துள்ளன. ஆனால் அவரையும் சர்ச்சைகள் விட்டு வைக்கவில்லை.

- Advertisement -

கடந்த ஆண்டு நடிகர் தனுஷ் , 18 ஆண்டு கால திருமண வாழ்வை முறித்துக் கொண்டார்.அவர் அவருடைய மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார். இதற்கு காரணம் பல வகையில் கூறப்பட்டன. அதில் முக்கியமாக அந்த காரணங்களில் ஒரு சில நடிகைகள் பெயர்களும் அடிபட்டன.இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை சுருதிஹாசன் தற்பொழுது பேசியுள்ளார்

கடந்த ஆண்டு ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து தான் பேசிக் கொண்டிருந்தது. மேலும், பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் போகிறோம் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அதோடு இவர்களின் பிரிவிற்கு பல நபர்களை காரணம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் இவர்களுடைய பிரிவிற்கு காரணம் சுருதிஹாசன் என்று சோசியல் மீடியாவில் பல வதந்திகள் வைரலாகி இருந்தன.

- Advertisement -

ஏனெனில் , நடிகர் தனுஷ் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த படம் 3. இந்த படத்தை தனுஷின் முதல் மனைவி ஐஸ்வர்யா தான் இயக்கி இருந்தார். இந்த ஐஸ்வர்யா தனுஷுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் தனுஷுக்கும் சுருதிஹாசனுக்கும் இடையே தொடர்புகள் இருப்பதாக ஏற்பட்ட தகவல் வெளிவந்தது. இது பற்றி ரஜினி யும் கண்டித்து இருந்தார் என்றும் பல வதந்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி கொண்டே இருந்தது. மேலும், தற்போது வரை இவர்களுடைய பிரிவிற்கு காரணம் இதுவாக இருக்கலாம் என்று கூறி வந்தார்கள்.

- Advertisement -

நடிகை ஸ்ருதிஹாசன் கூறும்போது ” செய்தி குறித்து நான் பலமுறை விளக்கம் கொடுத்து விட்டேன். தற்போதும் இது எங்களை பின்தொடர்கிறது. ஏன் என்று தெரியவில்லை. இது பின்தொடர்கிறது. இது மட்டும் இல்லை என்னை சுற்றி இது போன்ற ஆயிரம் வதந்திகள் இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் தனுஷும் ஒரு முக்கியமான நண்பர். ஆனால், அதற்காக வரும் வதந்திகளை எல்லாம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. நான் மக்களை குறை சொல்லவில்லை. எப்போதும் என் பின்னாடி மைக்ரோ சிப் பொருத்தி நான் போகும் இடமெல்லாம் பாருங்கள் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

Most Popular