Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாகோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் ! - இளையராஜா பற்றி நடிகர் அனுமோகன்...

கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் ! – இளையராஜா பற்றி நடிகர் அனுமோகன் பேட்டி

தமிழ் திரை உலகத்தில் ரசிகர்களைக் கவர்ந்த பல இசையமைப்பாளர்கள் இருந்தாலும், தலைமுறை தலைமுறையாக தனது இசையால் அனைவரையும் கவர்ந்தவர் இளையராஜா மட்டுமே . காலம் கடந்தாலும் அவரது பாடல்கள் நினைவில் நிற்கும். அதனால்தான் அவர் சிறந்த இசையமைப்பாளராகக் கொண்டாடப்படுகிறார்.

- Advertisement -

இவர் இசையமைத்த மெல்லிசை, இனிமையான பாடல்களை நினைத்து முணுமுணுக்க அந்த பெயரே போதும். இளையராஜா தென்னிந்திய திரையுலகிற்கு மட்டுமின்றி இந்தி படங்களுக்கும் தனது பங்களிப்பை அளித்துள்ளார். பல்வேறு மொழிப் படங்களுக்கு இசையமைத்து நாடு முழுவதும் எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றார்.இசைக்கு உணர்ச்சிகளைத் தூண்டும் ஆற்றல் உண்டு என்றும் அது மக்களுடன் மிகவும் சிறப்பான முறையில் இணைகிறது என்றும் இளையராஜா எப்போதும் கூறுகிறார். இளையராஜாவின் பாடல்களைக் கேட்கும் எவரும் இதற்கு மேல் ஒத்துக்கொள்ள முடியாது. இளையராஜாவின் இசையில் ஒரு தனி மந்திரம் இருக்கிறது, உள்ளே போனவர் அதிலிருந்து அவ்வளவு எளிதில் வெளிவர முடியாது.

இவருடைய இசை திறமையை தாண்டி ஒரு சில விஷயங்களால் இவர் நன்கு அறியப்பட்டவர். அதில் முக்கியமான ஒன்று அவரிடம் இருக்கும் கோபம். யாராவது விளையாட்டாக கேள்வி கேட்டாலும், சட்டென்று கோபப்பட்டு பதில் அளிப்பது இவருடைய இயல்பான பாணியாக உள்ளது. இது குறித்து அவருடன் பணியாற்றிய நடிகர் அனுமோகன் தற்போது பேசியுள்ளார்.

- Advertisement -

நடிகர் அனுமோகன் தமிழில் சிறந்த குணசத்திர நடிகராக வலம் வந்தவர். இவர் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த படையப்பா திரைப்படத்தில்,ரசிகர்களால் நன்கு அறியப்பட்டவர் அந்த திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கது இடம் பிடித்தவர்.

- Advertisement -

ஒரு தனியார் வலைதள நிகழ்ச்சியில் நெறியாளர் கேட்ட கேள்விக்கு அனுமோகன் கூறியதாவது “கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமும் இருக்கும். நீங்கள் ஏன் அவர் கோபப்படும்படி நடந்து கொள்கிறீர்கள்? அவர் கோபப்படுவார் என தெரிந்ததும் நீங்கள் அவ்வாறு நடப்பது எதற்காக? இது மனிதனுடைய இயல்பு,கோபம் எல்லாருக்கும் தான் வரும் ” என்றார்.

தற்போது வெளியாகி திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம், அடுத்து வெளி வரப்போகும் இரண்டாவது பாகத்திலும் இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலை படத்தின் முதல் பாகத்தில் இவருடைய இசை பாராட்டத்தக்க வகையில் உள்ளது. மேலும் படத்தில் ஒரு பாடல் இளசுகள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular