Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாஅடுத்த குணசேகரன் யார்? மாரிமுத்துவை மாற்ற முடியுமா?

அடுத்த குணசேகரன் யார்? மாரிமுத்துவை மாற்ற முடியுமா?

1995 இல் வெளிவந்த ஆசை திரைப்படத்தில் துணை இயக்குனராக சினிமாவில் தன் பயணத்தை தொடங்கியவர் மறைந்த நடிகர் மாரிமுத்து அவர் அதைத் தொடர்ந்து இயக்குனர் எஸ் ஜே சூர்யா இயக்கிய வாலி உதயா கண்ணும் கண்ணும் புலிவால் போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் அதை வாலி திரைப்படத்தின் மூலம் அவர் துணை கதாபாத்திரமாகவும் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.ஏறத்தாழ 50 திரைப்படங்களுக்கு மேல் இவர் துணை நடிகராக நடித்திருக்கிறார் தமிழ் சினிமாவில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்திலும் இவர் கடைசியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளித்திரையில் துணை நடிகராக இருந்த இவரை சின்னத்திரையில் பிரபலமாகியது எதிர்நீச்சல் என்ற தொடர் இயக்குனர் திருச்செல்வத்தின் இயக்கத்தில் சன் டிவி யில் ஒளிபரப்பாகி வந்தது. எதிர்நீச்சல் தொடர் இதில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

- Advertisement -

மறைந்த நடிகர் மாரிமுத்து இவருடைய மாரிமுத்து என்ற பெயரை மறைந்து இவரை குணசேகரன் என்றால் தான் பலருக்கும் இப்போதெல்லாம் தெரிய வருகிறது. அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்தோடு ஒன்றி வாழ்ந்து இறந்து இருக்கிறார் மாரிமுத்து.

- Advertisement -

அந்தத் தொடரில் அவர் மிக மிக மோசமான ஒரு கேரக்டரில்தான் நடித்திருப்பார் பெண்களை மதிக்காத குடும்பத்துப் பெண்களை ஆதிக்கம் செய்யும் ஒரு அரக்கனாகத்தான் அவர் தொடரில் பிரபலமாகினார். அந்த கதைக்கு அவர் இன்றி வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார் என்ற அளவிற்கு பெயரை பெற்றார்.

குணசேகரன் என்ற மாரிமுத்து பெண்களை அவதூறாக திட்டுவதும் கட்டிய மனைவியை கேவலப்படுத்துவதும் தான் அவருடைய கதாபாத்திரம் ஆனால் அதை கொண்டாடுகின்றார்கள். மக்கள் என்றால் அவருடைய நடிப்பு அந்த அளவிற்கு இருந்தது அவருக்காகவே அந்த தொடர் டி ஆர் பி யில் முதலிடம் பெற்று வந்தது அப்படிப்பட்ட அவருடைய நடிப்பை அத்தொடர் தற்பொழுது இழந்திருக்கிறது.

அதை ஈடு செய்ய யார் வரப் போகிறார்கள் என்று கேள்வி தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் பரவி வருகிறது. ரசிகர்களுடைய இந்த கேள்விக்கு தற்பொழுது ஒரு சில பதில்களும் கிடைத்து வருகிறது இவராக இருக்குமோ அவராக இருக்குமோ என்ற சந்தேகத்திலும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

2008 ஆம் ஆண்டு சுந்தர் சி யின் நடிப்பில் வெளிவந்த ஆயுதம் செய்வோம் என்ற திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வேலராமமூர்த்தி. அதைத்தொடர்ந்து அவர் நிறைய கிராமத்து கதைகளில் நடித்திருக்கிறார். கிடாரி கொம்பன், மதயானை கூட்டம், ரஜினி முருகன், சேதுபதி போன்ற திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரமாக நடித்திருந்தார்.

வேலராமமூர்த்தி அவர் இந்த கதைக்கு குணசேகரனாக நடிக்க பொருத்தமாக இருப்பார் என்று தற்பொழுது கூறப்பட்டு வருகிறது. மேலும் அவரைப்போல் அந்தக் கதைக்கு பொருத்தமாக எம்எஸ் பாஸ்கரன் மற்றும் சேத்தன் ஆகியோரும் இந்த கதைக்கு பொருத்தமாக இருப்பார்கள் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இவர்களில் யார் அடுத்த குணசேகரன் என்ற கேள்விக்கு இதுவரை தெளிவான விடை எதுவும் கிடைக்கவில்லை

அதிகாரப்பூர்வமான தகவலுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.குணசேகரனின் இடத்தை நிரப்பி அந்த தொடரை தூக்கி நிறுத்தப் போவது யார் என்பதை விரைவில் அறிந்திட ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Most Popular