Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாநெல்சன் செய்த சம்பவம்.. விஜய் ரசிகர்கள் அலறிய முதலாம் ஆண்டு இன்று

நெல்சன் செய்த சம்பவம்.. விஜய் ரசிகர்கள் அலறிய முதலாம் ஆண்டு இன்று

- Advertisement -

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து ரசிகர்களின் பெரும்பான்மையான எதிர்பார்ப்பை கொண்டு திரையரங்குகளில் வெளி வந்தது திரைப்படம் பீஸ்ட்.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தின் முதலில் வெளிவந்த டாக்டர் திரைப்படத்தின் வரவேற்பு கருத்தில் கொண்டு ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படத்தின் மீதும் தங்களின் எதிர்பார்ப்புகளை பெருமளவில் வைத்து விட்டார்கள். அதை மேலும் அதிகப்படுத்தும் விதத்தில் இசையமைப்பாளர் அனிருத் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் அலமத் ஹபிபு என்ற பாடல் வெளியானதில் இருந்து பெருமளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தது.

- Advertisement -

இந்தத் திரைப்படம் வெளியானதில் இருந்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தந்தது. 230 கோடி ரூபாய்  வசூலை பெற்றாலும் இது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. இந்த திரைப்படம் குறுகிய காலம் தான் திரையரங்கிலும் போடப்பட்டது. டாக்டர் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் நெல்சனுக்கு கிடைத்த அந்த பெயர் புகழ் எல்லாம் பீஸ்ட் திரைப்படத்தால் சரிந்து விட்டது.

- Advertisement -

மேலும் இந்த திரைப்படம் வெளிவந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. ஆனால் இப்பொழுது எந்த ரசிகரின் சிந்தனையிலும் பீஸ்ட் திரைப்படம் இடம்பெறவில்லை. ஆனால் இந்த தோல்வியை தளபதி ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 1000 இருந்தாலும் தளபதி திரைப்படம் இப்படி ஆகி இருக்கக் கூடாது என்ற வருத்தம் இன்றும் அவர்கள் மனதில் நிறைந்திருக்கிறது.

பிறகு வந்த வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி அடைந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் பீஸ்டு திரைப்படம் இவ்வாறு ஆனது ரசிகர்களை வருத்தம் அடைய செய்கிறது. வாரிசு திரைப்படத்தின் மூலம் தளபதி விஜய் ரசிகர்களின் உடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விட்டார் அதேபோல் தற்பொழுது ஜெயிலர் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இயக்குனர் நெல்சன் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விட்ட இடத்தை பிடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்களின் மத்தியில் இருந்து வருகிறது.

Most Popular