Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாவெள்ளி திரையில் வாய்ப்பு கிடைக்காததால் நடிகை கௌசல்யா எடுத்த முடிவு ... ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

வெள்ளி திரையில் வாய்ப்பு கிடைக்காததால் நடிகை கௌசல்யா எடுத்த முடிவு … ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

90’s  இல் பேவரைட் ஹீரோயின் லிஸ்டில் இடம் பிடித்தவர் நடிகை கௌசல்யா. மெல்லிய உடலும், மென்மையான அழகும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .இவர் அந்த பொழுதில் வெளிவந்த நிறைய திரைப்படங்களில் கதாநாயகியாக இருந்திருக்கிறார். அதிலும்  முக்கிய கதாநாயகர்களான கார்த்திக், பிரசாந்த் ,பிரபுதேவா போன்ற நடிகர்களுக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார் நடிகை கௌசல்யா.

- Advertisement -

இவர் சில பல உடல் நலக்குறைவால் சற்று உடல் பருமன் ஆகி சினிமாவை விட்டு விலகி இருந்தார் .தற்பொழுது உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஒரு சில பேட்டிகளில் கூறியிருக்கிறார் நடிகை கௌசல்யா . இன்னும் சில பேட்டிகளில் திருமணத்தில் எனக்கு ஆர்வம் இல்லை அதனால் தான் நான் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் கூறுகிறார் நடிகை கௌசல்யா. இந்நிலையில் தன்னுடைய உடல்நிலை சரியாகி விட்டதால் ஒரு சில திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாக நடித்து வருகிறார்.

இப்படி இருந்த கௌசல்யா தற்பொழுது சின்னத்திரைக்கு வருகை தந்திருக்கின்றார் என்பது ரசிகர்களுக்கு பெருமகிழ்ச்சி அளித்திருக்கிறது .பெரிய திரையில் முன்னணி நட்சத்திரமாக வளம் வந்த பல கதாநாயகிகள் ஒரு கட்டத்திற்குப் பிறகு சின்னத்திரையில் தான் அவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் .

- Advertisement -

நடிகை ராதிகா ,குஷ்பூ ,தேவயானி ,ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகைகள் சின்னத்திரையிலும் பெயர் பெற்று விளங்கினார்கள் இந்த பட்டியலில் தற்பொழுது கௌசல்யாவும் இடம்பெறப் போகிறார் என்பதே ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி என்ற தொடரில் நடிகை கேப்ரலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தற்பொழுது கலெக்டராக இருக்கிறார். அந்த பதவியால் தன் சொந்த வாழ்க்கை பாதிக்கப்படுவதாலும், குடும்பத்தாருக்கு பகைவர்களால் தீங்கு நேருவதாலும் அந்த பதவியை ராஜினாமா செய்ய முன் வரும் சுந்தரியை பெண்மையை உயர்த்தும் கதாபாத்திரத்தில் இருந்து அறிவுரை கூறி வருகிறார் நடிகை சௌந்தர்யா.

இந்த கதாபாத்திரம் இவருக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாகவும் இதுபோல் அவர் இன்னும் நிறைய கதாபாத்திரங்களில் பல தொடர்கள் நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள் .பெரிய திரையை கைவிட்ட கௌசல்யா சின்னத்திரைக்கு வந்தது ரசிகர்களை பெருமகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

Most Popular