Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாஇயக்குனர் பாலா நடிகை இடம் இப்படி நடந்து கொண்டாரா..? கடுப்பாகிய ரசிகர்கள்..!

இயக்குனர் பாலா நடிகை இடம் இப்படி நடந்து கொண்டாரா..? கடுப்பாகிய ரசிகர்கள்..!

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் தற்பொழுது வணங்கான் திரைப்படத்தை நடித்து வருகிறார். ஆரம்பத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து வந்தார் .

- Advertisement -

அதற்குப் பிறகு சில பல காரணங்களால் அந்த திரைப்படத்தை விட்டு நடிகர் சூர்யா விலகி விட்டார். அதனால் தற்பொழுது அருண் விஜய் வைத்து அந்த திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்தத் திரைப்படத்தின் நடிகர் சூர்யாவுடன் மமிதா பைஜு  தான் கதாநாயகியாக  நடித்து வந்தார். இவர் தெலுங்கு சினிமாவில் ஆப்ரேஷன் ஜாவா, சூப்பர் சரண்யா ,பிரேமலு போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரும் திடீரென்று இந்த திரைப்படத்தை விட்டு விலகி விட்டார் .இன்னும் சொல்லப்போனால் இவர் தான் இந்த திரைப்படத்தை விட்டு முதலில் விலகினார் .இதன் காரணத்தினால் தற்பொழுது இந்த திரைப்படத்தில் ரோஷினி பிரகாஷ் என்ற தெலுங்கு கதாநாயகி தான் அருண் விஜய் நடிக்கும் படங்கள் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த வருகிறார்.

- Advertisement -

திடீரென்று ஏன் படத்தை விட்டு மமிதா பைஜு விலகினார் என்ற கேள்வி பலர் மத்தியில் இருந்து வந்தது. அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் தற்பொழுது மமிதா பைஜு  கொடுத்த பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

நேஷனல் அவார்ட் கொடுத்தாள் நிறைய இயக்குனர்கள் தங்களைப் பெரிய ஹிட்லராக நினைத்துக் கொள்கிறார்கள். சிரித்து பேசுவதே இல்லை உம்மென்று மூஞ்சை வைத்துக் வைத்துக் கொள்கிறார்கள் .மேலே பார்த்து எதையோ சிந்தித்துக்கொண்டே இருக்கிறார்கள் ஒரு படி மேலே சென்று நடிகர் நடிகைகள் சரியாக நடிக்கவில்லை என்றால் அவர்களை தாக்குகிறார்கள் என்று கூறிவிட்டு படப்பிடிப்பில் நடந்த நிகழ்வு பற்றியும் கூறியிருக்கிறார்.

படப்பிடிப்பில் நான் வில்லு அடித்து வில்லுப்பாட்டு பாட வேண்டும் அந்த காட்சிக்கு நான் வில்லை சரியாக அடிக்காததால் என்னை தாக்கி விட்டார் இயக்குனர் பாலா இதனால்தான் நான் அதை விட்டு விலகி விட்டேன் .ஆனால் நடிகர் சூர்யாவும் ,பாலாவும் நல்ல நண்பர்கள் தான் அவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று எனக்கு தெரியாது. நடிகர் சூர்யா அதை விட்டு விலகியதற்கு என்ன காரணம் என்பதும் எனக்கு தெரியாது என்று கூறியிருக்கிறார் நடிகை மமிதா பைஜு.

ஒரு இயக்குனர் இப்படி நடிகைகளிடம் நடந்து கொள்வதை ரசிகர்கள் கண்டித்து வருகிறார்கள். ஒரு திரைப்படம் நன்றாக வரவேண்டும் என்று சின்சியாராக  இருப்பது சரிதான் .அதற்காக பிறரை துன்புறுத்துவது எந்த வகையிலும் நியாயம் இல்லை என்று ரசிகர்கள் பாலா செய்த இந்த செயலை கண்டித்து வருகிறார்கள்.

Most Popular