Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாபிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்.. ரசிகர்கள் சோகம்! காரணம் என்ன?

பிரபல நடிகர் மாரிமுத்து காலமானார்.. ரசிகர்கள் சோகம்! காரணம் என்ன?

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக அறிமுகமாகி பின் இரண்டு படங்களை இயக்கி அதன் பிறகு தனது நடிப்பால் உச்சம்  தொட்டவர் நடிகர் மாரிமுத்து. 1992 ஆம் ஆண்டு அரண்மனைக்கிளி போன்ற படங்களில் உதவி இயக்குனராக ராஜ் காரனுடன் இணைந்த மாரிமுத்து பிறகு இயக்குனர் வசந்துடன் துணை இயக்குனராக ஆசை போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

- Advertisement -

அதன் பிறகு கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களில் இயக்குனராக தமிழ் சினிமாவில் மாரிமுத்து பணியாற்றினார். அதன் பிறகு யுத்தம் செய் என்ற மிஸ்கின் எடுத்த படத்தின் முழு நேர நடிகராக அறிமுகமான மாரிமுத்து, பரியேறும் பெருமாள்,பைரவா, விக்ரம்,ஜெயிலர் போன்ற எண்ணற்ற படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் மாரிமுத்துவை ஒவ்வொரு வீட்டிலும் கொண்டு போய் சேர்த்தது சன் டிவியில் அவர் நடித்த எதிர்நீச்சல் சீரியல்தான். இதில் குணசேகரன் கதாபாத்திரமாக நடித்த மாரிமுத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார்.

- Advertisement -

இந்தம்மா ஏய் என்று அவர் பேசும் வசனம் அவரை பிரபலமாக்கியது. இந்த நிலையில் நடிகர் மாரிமுத்து வளசரவாக்கத்தில் எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிவிட்டு வீடு திரும்பி இருக்கிறார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. இதனை எடுத்து மருத்துவமனைக்கு கொண்டும் செல்வதற்கு முன்பே நடிகர் மாரிமுத்து காலமாகிவிட்டார்.

- Advertisement -

இதனை அடுத்து தற்போது மாரிமுத்துவின் உடன் அவருடைய சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்லப்படுகிறது. வெறும் 56 வயதான மாரிமுத்து தற்போது தான் புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்தார். ஒவ்வொரு வீட்டிலும் குணசேகரன் ஆக வாழ்ந்து வந்த மாரிமுத்து திடீரென்று உயிரிழந்தது அவருடைய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனை அடுத்து பலரும் மாரிமுத்து உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திரைப்படத் துறையினர் மிக சிறு வயதில் காலமாகுவது ரசிகர்களுடைய சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கலைஞர்கள் தங்களது உடல் நிலையை அக்கறை செலுத்தி கொள்ள வேண்டுமென ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Most Popular