Friday, May 3, 2024
- Advertisement -
HomeEntertainmentஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது இல்லையா.. இதயம் நொறுங்கிய தெலுங்கு நடிகர்.. ஓபனாக இன்ஸ்டாகிராமில்...

ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது இல்லையா.. இதயம் நொறுங்கிய தெலுங்கு நடிகர்.. ஓபனாக இன்ஸ்டாகிராமில் பதிவு

நேற்று அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஒட்டுமொத்தமாக இந்துத்துவ கருத்துள்ள படங்களுக்கும், நட்சத்திரங்களுக்குமே விருதுகளை அள்ளி கொடுக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

குறிப்பாக தமிழில் வெளியாகிய ஜெய் பீம், சார்பட்டா பரம்பரை, மாநாடு மற்றும் கர்ணன் ஆகிய படங்களுக்கு ஒரு பிரிவில் கூட விருது அறிவிக்கப்படவில்லை. அதிலும் ஜெய் பீம் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய மணிகண்டன் மற்றும் லிஜோமோல் ஜோஸ் ஆகியோருக்கு தேசிய விருது அறிவிக்கப்படவில்லை.

குரலற்றவர்களின் குரலாய் ஒலித்த ஜெய் பீம் படத்திற்கே தேசிய விருது ஏன் அறிவிக்கப்படவில்லை என்று தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தேசிய ஒருமைப்பாட்டுக்கான விருது காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு அறிவித்து, தேசிய விருதுக்கு கலங்கம் ஏற்படுத்திவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

- Advertisement -

இந்த நிலையில் ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்படாததற்கு தெலுங்கு நடிகர் நானி தனது ஆதங்கத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். வெறும் ஜெய் பீன் என்று பதிவிட்டு, அருகில் இதயம் நொறுங்கியதாக நானி பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக வைரலாகி வருகிறது.

- Advertisement -

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. தெலுங்கு சினிமாவில் நிலவி வரும் வாரிசு போட்டிக்கு மத்தியில் சுயம்பாக முன்னேறி தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தியவர் நானி. அவர் நேரடியாக ஜெய் பீம் படத்திற்காக குரல் கொடுத்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலரும் நானிக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

Most Popular