Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாநடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் நானியின் காம்போவில் திரைப்படமா ..?அட்டகாசமா இருக்குமே..!

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் நானியின் காம்போவில் திரைப்படமா ..?அட்டகாசமா இருக்குமே..!

நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடந்த பிஹைண்ட் வுட்ஸ் கோல்ட் ஹால் ஆப் பேம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் .அதே நிகழ்ச்சியில் தெலுங்கு சினிமாவின் நேச்சுரல் ஸ்டார் என்று அழைக்கப்படும் நானியும் கலந்து கொண்டார்.

- Advertisement -

அப்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் மேடையில் பேசும்பொழுது நடிகர் நானியைப் பற்றி பேசினார் .நடிகர் சிவகார்த்திகேயன் நானும் நடிகர் நானியும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று பலரும் சோசியல் மீடியாவில் கேட்கிறார்கள். அதுவும் நாங்கள் இருவரும் சகோதரர்களாக நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

எனக்கும் நடிகர் நானியை ரொம்ப புடிக்கும் அவருடைய திறமையான நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவரும் என்னைப் போல் சாதாரணமாக இருந்து இப்பொழுது பெரிய ஸ்டார் ஆகி இருக்கிறார். அவரும் என்னைப் போல் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்து இப்பொழுது ஹீரோவாக இருக்கிறார்.

- Advertisement -

எனக்கும் அவருக்கும் ஏதோ ஒரு கனெக்சன் இருப்பது போல் நான் எப்பொழுதுமே உணருவேன் என்று கூறியிருந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். அதை சரி என்று ஒப்புக் கொள்வது போலாகவே க்யூட்டாக  நடிகர் நானி மேடைக்கு கீழ் அமர்ந்து கொண்டு ரியாக்சன் கள் மூலம் பதில் கொடுத்துக் கொண்டிருந்தார்.

- Advertisement -

கடைசியில் எனது குருஜி நெல்சன் அவருடன் தான் நான் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்தேன். நான் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்ததாலோ என்னவோ தெரியவில்லை அந்த திரைப்படம் வெளியிடப்படவே இல்லை என்று அவருடைய பாணியில் நகைச்சுவையாக பேசினார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர்கள் இவ்வாறு பேசியது இவர்களின் காம்போவை திரையில் பார்க்க வேண்டும் என்று ஆசையில் இருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தி விட்டது.

Most Popular