Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாஎல்லாருக்கும் அல்வா கொடுத்தது போல் எனக்கும் அல்வா கொடுத்துவிட்டார் அட்லி ! - சோகத்தில் முத்தழகு

எல்லாருக்கும் அல்வா கொடுத்தது போல் எனக்கும் அல்வா கொடுத்துவிட்டார் அட்லி ! – சோகத்தில் முத்தழகு

பருத்திவீரன் திரைப்படத்தில் அறிமுகமாகி ,தன் அபாரமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியவர் நடிகை பிரியாமணி.!!
கிராமத்து பெண்ணாக முத்தழகு கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்திருந்தார் பின்பு பலப்படங்களில் அவர் நடித்திருந்தாலும் முத்தழகு கதாபாத்திரம் தான்  இன்றும் அனைவரது மனதிலும் நீங்காத இடம் பெற்றுள்ளது..!

- Advertisement -

இவர் தற்போது அனைத்து மொழிகளிலும் வெளிவந்து பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பி கொண்டிருக்கும் உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்..அதைப் பற்றி மனம் திறந்த பிரியாமணி, தான் முன்பே  ஷாருக்கான் உடன் இணைந்து சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ,1234 என்ற பாடலுக்கு நடனமாடி இருந்ததையும் !அது பெரும் வரவேற்பு பெற்றதையும்! நினைவு கூர்ந்தார்.

அதன் பின்பு  ஜவான் படத்தில் தான் நடிப்பதாக செய்திகள் வெளிவந்த போது , அதுவும் ஒரு ஐட்டம் டான்ஸ் ஆகத்தான் இருக்கும் என்று அனைவரும் கிண்டல் செய்தார்களாம். அதைப் பற்றி எல்லாம் தான் கவலைப்படவில்லை என்றும்,  ஷாருக்கான் உடன் இணைந்து நடித்தால் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதைபற்றி யோசிக்க மாட்டேன் என்றும் கூறினார்.

- Advertisement -

ஆனால் ஜவான் படத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் தான் நடித்தது பெருமையாக கருதுவதாக கூறினார்.தன்னுடன் இணைந்து நடித்த கேர்ள்ஸ் டீம் அனைவருமே மிகுந்த உத்வேகத்துடன் சண்டைக் காட்சிகளுக்கு கூட பயிற்சி பெற்றதை உற்சாகத்துடன் கூறினார்.

- Advertisement -

ஜவான் படப்பிடிப்பின் போது, படத்தின் இயக்குனர்  அட்லீயிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, ஜவான் படத்தில் உச்ச நட்சத்திரங்களான தளபதி விஜய் ,அல்லு அர்ஜுன் போன்றவர்கள் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளி வருகின்றனவே அது உண்மையா? என்று கேட்டாராம்!

அதற்கு அட்லீ, தளபதி விஜய் அல்லு அர்ஜுன் தானே பேஷா பண்ணிடலாம் !! என்று சிரித்துக் கொண்டே கூறினாராம்.
அதனை தான் உண்மை என்றுதான் இறுதிவரை நம்பி இருந்ததாகவும் கடைசியில் அட்லி தன்னை ஏமாற்றி விட்டதை படத்தைப் பார்த்து தெரிந்து கொண்டதாகவும் பிரியாமணி தெரிவித்தார்.

Most Popular