Sunday, April 28, 2024
- Advertisement -
Homeசினிமாசூப்பர் ஸ்டார் திரைப்படத்தில் இருந்து விலகிய சினேகா..! காரணம் என்ன..?

சூப்பர் ஸ்டார் திரைப்படத்தில் இருந்து விலகிய சினேகா..! காரணம் என்ன..?

90ஸ் ஃபேவரிட் ஹீரோயின் லிஸ்டில் மிக முக்கியமானவர் நடிகை சினேகா. இவரின் சிரிப்பழகிற்கு புன்னகை அரசி என்றும் ரசிகர்களால் புகழப்பட்டவர். இவர் தமிழில் மாதவன் நடித்த என்னவளே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

- Advertisement -

அது தொடர்ந்து அவர் பார்த்தாலே பரவசம்,
ஆனந்தம், உன்னை நினைத்து ,பம்மல் கே சம்பந்தம் போன்ற நிறைய திரைப்படங்களில் செகண்ட் ஹீரோயின் ஆக நடித்திருக்கிறார் .ஆனாலும் அவருக்கு திரைப்படத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதற்குப் பிறகு அவருடைய நடிப்பு திறமையும் அழகிய முகமும் அவரை முன்னணி நடிகைகள் ஒருவராக வளர்த்தது . வசீகரா ,பார்த்திபன் கனவு, வசூல்ராஜா எம்பிபிஎஸ் ,ஜனா, பள்ளிக்கூடம் ,சிலம்பாட்டம், நான் அவன் இல்லை, பிரிவோம் சந்திப்போம் என்ற பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் நடிகை சினேகா.

- Advertisement -

இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளிலும் நிறைய திரைப்படங்கள் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோன்று மாதவன் ,ஸ்ரீகாந்த், விஜய், அஜித் ,சூர்யா, உலக நாயகன், கமலஹாசன் என்ற பல கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நடிகை சினேகா

- Advertisement -

2012 ஆம் ஆண்டு பிரபல நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார்  நடிகை சினேகா. அதற்குப் பிறகும் தன்னுடைய நடிப்பை தொடர்ந்தார். ஆனால் அதற்குப் பிறகு கதாநாயகியாக நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறாத நிலையில் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் முக்கியத்துவம் குறித்து நடிக்க தொடங்கினார்.

அதற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு மீண்டும் வந்தார் நடிகை சினேகா. அதைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட சினேகாவை பற்றி தற்பொழுது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது .இத்தனை பிரபலங்களுக்கு கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை சினேகா இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினி உடன் நடிக்கவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த குசேலன் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் சினேகா இடம் பெற்றாலும் அது பெரும் அளவில் சொல்லிக் கொள்ளும் கதாபாத்திரம் அல்ல.

ஆனால் நடிகை சினேகாவிற்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தும் அது அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை தழுவ விட்டுவிட்டார் என்று கூறுகிறார்கள் .2014 ஆம் ஆண்டு வெளிவந்த கோச்சடையான் திரைப்படத்தில் நடிகை சினேகா தான் தங்கையாக நடிக்க இருந்திருக்கிறது. அதற்காக அவரும் ஒப்புக் கொண்டிருந்திருக்கிறார்.

ஆனால் திரைப்படம் எடுப்பதற்கு சற்று தாமதமானதால் நடிகை சினேகா திரைப்படத்தை விட்டு விலகி விட்டதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக நடிக்க வேண்டுமா என்று யோசித்த சினேகா பின் சூப்பர் ஸ்டாரின் திரைப்படத்தில்  நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது பெருசு என்று இதற்கு ஒப்புக்கொண்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Popular