Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainment38 வயதில் வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம் ஓவர்.. மும்பை தொழிலதிபருடன் விரைவில் திருமணமாம்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட...

38 வயதில் வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம் ஓவர்.. மும்பை தொழிலதிபருடன் விரைவில் திருமணமாம்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ராதிகா

”போடா போடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். அதன்பின் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா உள்ளிட்ட படங்களில் நடித்த வரலட்சுமி, வில்லியாக பல கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். குறிப்பாக சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2, கிராக், யஷோதா, வீர சிம்மா ரெட்டி உள்ளிட்ட படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை கொடுத்தது.

- Advertisement -

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதனிடையே சிம்பு, தனுஷ் உள்ளிட்டோர் படங்களில் நடித்தாலும், விஷாலுடன் நெருக்கம் காட்டினார். விஷாலுடன் காதலில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இருவரும் ஒன்றாக சேர்த்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் காணப்பட்டனர்.

இதையடுத்து திடீரென உடல் எடையை குறைத்த வரலட்சுமி, அடுத்தடுத்து ஏராளமான படங்களில் நடித்தார். அதேபோல் விஷாலை என் வாழ்வில் மன்னிக்க மாட்டேன் என்று பேட்டியளிக்க, விஷால் – வரலட்சுமிக்கு பிரேக் அப்பானதாக தெரிய வந்தது. இதன்பின் ஹைதராபாத்தில் தனி வீடு எடுத்து வாழ்ந்து வந்தார் வரலட்சுமி.

- Advertisement -

இந்த நிலையில் மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிகோலய் சச்தேவ் என்பவருடன் வரலட்சுமிக்கு நிச்சயதார்த்தம் முடிவடைந்துள்ளது. நண்பர்கள், பெற்றோர், குடும்பத்தினர் முன்னிலையில் நடந்த நிச்சயதார்த்த்ததில் இருவரும் மோதிரம் மாற்றி கொண்டனர். இந்த அறிக்கையை நடிகையும், சரத் குமாரின் மனைவியுமான ராதிகா அறிவித்துள்ளார்.

- Advertisement -

இரு குடும்பத்தினர் பங்கேற்ற நிச்சயதார்த்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. 38 வயதாகும் வரலட்சுமி இறுதியாக திருமணம் செய்யவுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்பின் பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Most Popular