Friday, May 17, 2024
- Advertisement -
HomeUncategorizedஆதிபுருஷ் படத்தின் முதல் வார வசூல்..படுத்தோல்வியை நோக்கி பிரபாஸ்

ஆதிபுருஷ் படத்தின் முதல் வார வசூல்..படுத்தோல்வியை நோக்கி பிரபாஸ்

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் மிகப்பெரிய புகழை அடைந்தார் . தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த பிரபாஸ் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு தமிழ்,தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி கன்னடம் என்று அனைத்து மொழிகளிலும் பிரபலமானார்.

- Advertisement -

அதற்குப் பிறகு இவர் நடிக்கும் திரைப்படங்களின் மீது எல்லா மொழி ரசிகர்களும் ஆர்வம் காட்டி வந்தார்கள். பாகுபலிக்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் போன்ற திரைப்படங்களில் ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றியடைய விட்டாலும் ஓரளவு நல்ல வரவேற்பை தான் இந்த திரைப்படங்களும் பெற்றது.

கேளிக்கையாக மாறிய 3d:

இதைத்தொடர்ந்து தற்பொழுது நடிகர் பிரபாஸ் இயக்குனர் ஓம்ராஜ் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற திரைப்படத்தை நடித்திருந்தார். இது ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை 3d இல் வெளியிடப்பட்டது இந்த திரைப்படத்தின் மீது எவ்வளவு ஆர்வம் இருந்ததோ அதுவெல்லாம் இந்த திரைப்படத்தின் உடைய டீசர் வெளியிட்ட பொழுதே போய்விட்டது.

- Advertisement -

இது திரைப்படத்தின் உடைய டீசரில் 3டி காட்சிகள் கேலிச்சித்திரம் போலிருக்கிறது என்று பல விமர்சனங்கள் வெளிவந்தது. இதில் விழித்துக் கொண்ட பட குழுவினர்கள் திட்டமிட்ட நேரத்தில் திரைப்படத்தை வெளியிடாமல் சிறிது காலம் எடுத்துக் கொண்டு டீசரில் இன்னும் பல திருத்தங்களை செய்து வெளியிட்டார்கள்.

- Advertisement -

அதற்குப் பிறகு வெளியிடப்பட்ட ட்ரெய்லர் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றாலும் இது திரைப்படம் எப்படி இருக்க போகிறது என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் இருந்தது. இந்த சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தும் விதமாக இத்திரைப்படம் வெளியிடப்படும் எல்லா திரையரங்குகளிலும் அனுமருக்கென்று ஒரு சீட்டு ஒதுக்க வேண்டும் என்றெல்லாம் இயக்குனர் ஓம் ராவ் கோரிக்கை வைத்திருந்தார். இதுவெல்லாம் இத்திரைப்படத்தின் மீது இருந்த கொஞ்ச ஆர்வமும் முழுமையாக போகி விட்டது.

வசூல் ரீதியாகவும் தோல்வி:

இந்த நிலையில் கடந்த பதினாறாம் தேதி திரைப்படம் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட முதல் நாளை திரைப்படத்தின் உடைய வசூல் 100 கோடியை தாண்டி இருந்தது இன்று ஏழு நாட்கள் ஆகி இத்திரைப்படம் 350 கோடி ரூபாய் வசூலை பெற்றிருக்கிறது. இந்தியாவில் மட்டுமே இந்த நிலை என்றால் பிற நாடுகளில் சொல்லவே வேண்டாம்.

இந்த திரைப்படத்தை வெளியிடப்பட்ட இந்த ஏழு நாளின் 350 கோடி ரூபாய் வசூலை தான் இத்திரைப்படம் பெற்று இருக்கிறது. பாக்ஸ் ஆபிஸில் இந்த திரைப்படம் இருக்கும் நிலையைக் கண்டு டிக்கெட்டின் விலையை குறைத்தும் ரசிகர்கள் திரைப்படம் பார்க்க எந்த ஆர்வத்தையும் காட்டவில்லை. இதனால் திரைப்படம் படுதோல்வி அடைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular