Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentமீண்டும் இணையும் கோப்ரா கூட்டணி.. விக்ரமிற்கு கதை கூறிய அஜய் ஞானமுத்து.. எப்பா ஒருமுறை அடி...

மீண்டும் இணையும் கோப்ரா கூட்டணி.. விக்ரமிற்கு கதை கூறிய அஜய் ஞானமுத்து.. எப்பா ஒருமுறை அடி வாங்கியது போதாதா!

பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தங்கலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன்பின் சித்தா படத்தின் இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அடுத்ததாக நடித்து வருகிறார். இந்த நிலையில் கோப்ரா படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து மீண்ஞ்டும் விக்ரமிற்கு கதை ஒன்றை கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

- Advertisement -

ஏற்கனவே அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த கோப்ரா திரைப்படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பை பெறவில்லை. ரூ.100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான கோப்ரா திரைப்படத்தில் விக்ராம் இரு கதாபாத்திரத்தில் நடித்தார். அதேபோல் ரோஷன் மேத்யூ, ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி சவுத்ரி, மிருனாளினி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர்.

அது திருடனின் கதையாக தொடங்கி இறுதியாக பழிவாங்கும் கதையாக திரைக்கதை அமைக்கப்பட்டதோடு, தேவையில்லாமல் ஏராளமான காட்சிகள் இருந்ததால் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. இருப்பினும் கோப்ரா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், நடிகர் விக்ரம் மீண்டும் இயக்குநர் அஜய் ஞானமுத்துவுடன் இணைவேன் என்று கூறினார்.

- Advertisement -

இதனிடையே அஜய் ஞானம்த்து டிமாண்டி காலனி 2 பாகத்தை தயாரிப்பதாக அறிவித்தார். அதேபோல் இந்தியில் அஜய் தேவ்கன் இயக்குநர் அஜய் ஞானமுத்துவை அழைத்தார். இதனால் தற்போது அஜய் ஞானமுத்து அஜய் தேவ்கன் நடிப்பில் பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த நிலையில் மீண்டும் விக்ரமிற்கு கதை ஒன்றை கூறியுள்ளது தெரிய வந்துள்ளது.

- Advertisement -

இந்த படத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளது. அஜய் தேவ்கன் படத்திற்கு பாலிவுட் ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை பொறுத்தே விக்ரம் – அஜய் ஞானமுத்து கூட்டணி மீண்டும் இணைவது உறுதியாகும் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் இம்முறை கோப்ராவை போல் அல்லாமல் ஒரே கெட்டப்பில் விக்ரம் நடிப்பார் என்று பார்க்கப்படுகிறது.

Most Popular