Saturday, May 4, 2024
- Advertisement -
Homeசினிமாசெய்தியாளர்கள் கேட்ட கேள்வியில் மனம் உடைந்து போன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே அதிர்ச்சியா...?

செய்தியாளர்கள் கேட்ட கேள்வியில் மனம் உடைந்து போன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்… சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கே அதிர்ச்சியா…?

லால் சலாம் திரைப்படத்தின் இயக்குனரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

தன் தந்தை சங்கி இல்லை என்று கூறியது லால் சலாம் திரைப்படத்தின் பிரமோஷனுக்காக தான் என்று செய்தியாளர் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம்  சென்னை விமான நிலையத்தில் ஒரு கேள்வியை முன் வைத்தார்.

அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று சிரித்த முகத்துடன் பதில் கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார் .ஆனால் அதற்கு ஐஸ்வர்யா ரஜனிகாந்த் மிகவும் வருத்தப்பட்டதாக ட்ரைலர் வெளியீட்டு விழாவில் குறிப்பிட்டிருந்தார்.

- Advertisement -

ப்ரோமோஷன் செய்து ஒரு படத்தை வெற்றியடைய செய்வதற்கு எங்களுக்கு எந்த அவசியமும் இல்லை என்று கூறியிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினி காந்த்.

- Advertisement -

கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் செந்திலுக்கு முக்கிய கதாபாத்திரம். அவர்தான் இந்த திரைப்படத்தின் கதை கருவாக இருக்கிறார் என்று குறிப்பிட்டு இருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

மேலும் இதில் சில காட்சிகளில் அரசியலில் பேசப்பட்டு இருக்கிறது. அதை நான் ஒப்புக்கொள்கிறேன். எல்லாமே அரசியல் தான் என்றும் கூறியிருந்தார் .

எனக்கு அதிகம் பேசும் சுபாவம் இல்லை என்பதால் இசை வெளியீட்டு விழாவில் நான் இப்படி எல்லாம் பேச போகிறேன் என்பது என் தந்தையாகிய சூப்பர் ஸ்டாருக்கு தெரியாது. அவரே  அதிர்ச்சி அடைந்து போனார்.

எந்த கேள்வி கேட்பதாக இருந்தாலும் செய்தியாளர்கள் என்னை கேட்டு இருக்கலாம். என் தந்தையை கேட்டது எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது என்று பேசி இருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

Most Popular