Sunday, May 5, 2024
- Advertisement -
HomeEntertainmentதலைவர் எப்படி இருக்காரு?… ஆக்டிவா இருக்காருல்ல?… அன்புடன் நலம் விசாரித்த விஜய்… ச்சே… என்னா மனுஷன்யா...

தலைவர் எப்படி இருக்காரு?… ஆக்டிவா இருக்காருல்ல?… அன்புடன் நலம் விசாரித்த விஜய்… ச்சே… என்னா மனுஷன்யா என கண் கலங்கிய பருந்து ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாகிறது. இதில், மோகன்லால், ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், தமன்னா, யோகிபாபு, வசந்த் ரவி, ஜாக்கி ஜரஃப் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் வைரலாக, டிரைலரும் நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இந்த சூழலில், ஜெயிலர் திரைப்படத்திலிருந்து வெளியான டைகர்கா ஹூக்கும் திரைப்பட பாடல், பெரும் சர்ச்சையை கிளப்பியது. உன் அலம்பல் பாத்தவன், உன் அப்பன் விசில்ல கேட்டவன்-னு என பாடலில் இடம்பெற்ற அனைத்து வரிகளும், நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்பதை காட்டுவதாக உள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்தனர். அதே சமயம், நடிகர் விஜய்யை தாக்கிதான் இந்த வரிகள் எழுதப்பட்டிருப்பதாக சிலர் கூறினர்.

இப்படி பட்ட சூழலில், ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், பருந்து – காகம் கதையை கூறி பரபரக்க வைத்தார். காகம் நினைத்தாலும் பருந்து ஆக முடியாது என்று அவர் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் இணையத்தில் நேரடியாக விஜய் – ரஜினி ரசிகர்கள் மோத ஆரம்பித்தனர். அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்று தளபதி ரசிகர்கள் கூற, நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினியே என்று தலைவர் ரசிகர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில், தளபதி விஜய் எப்போதுமே ரஜினி ரசிகர்தான் என்பதை உணர்த்தும் வகையில் கலை இயக்குனர் கிரண், விஜய் உடன் நடந்த உரையாடலை தனியார் யூ டியூப் சேனலில் பேட்டி அளிக்கும் போது தெரிவித்திருக்கிறார். ஜெயிலர் படத்தின் கலை இயக்குனராக பணியாற்றும் கிரண் பேசியதாவது,

- Advertisement -

சமீபத்தில் வாரிசு பட செட்டில் விஜய்யை சந்தித்தேன். அப்போது விஜய், எப்படி இருக்காரு தலைவரு, நல்லா இருக்காருல்ல, ஆக்டிவா இருக்காருல்ல என்று கேட்டார். அவர் சூப்பராக இருக்கிறார் என்று நான் கூறினேன். அது மட்டுமல்ல, ஜெய்லர் படத்தின் முதல் நாள் சூட்டிங்கிற்கு, நெல்சனை தூக்கத்திலிருந்து எழுப்பி விட்டதே தளபதி விஜய்தான்” என்று தெரிவித்தார். இவரது பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விஜய் ரஜினி இருவரும் ஒற்றுமையாகதான் இருக்கிறார்கள் என்றும், அவரது ரசிகர்கள்தான் தேவையில்லாமல் அடித்துக் கொள்கிறார்கள் எனவும் சிலர் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Most Popular