Thursday, May 2, 2024
- Advertisement -
HomeEntertainmentடீசருடன் வெளியாகும் தனி ஒருவன் 2 அறிவிப்பு… சித்தார்த் அபிமன்யுவிற்கு அடுத்ததாக யார் வில்லன் தெரியுமா?

டீசருடன் வெளியாகும் தனி ஒருவன் 2 அறிவிப்பு… சித்தார்த் அபிமன்யுவிற்கு அடுத்ததாக யார் வில்லன் தெரியுமா?

எடிட்டர் மோகனின் இளைய மகனான ரவி, ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம், காதலை மாறுபட்ட கோணத்தில் காண்பித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ரசிகர்களால் அவர் ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து, தனது சகோதரர் மோகன் ராஜா இயக்கத்திலேயே எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் ஆகிய திரைப்படங்களில் ஜெயம் ரவி நடிக்க, அவை அனைத்தும் திரையரங்குகளில் கோலாகலமாய் கொண்டாடப்பட்டன.

- Advertisement -

சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் பெரிய அளவில் பேசப்பட்டன. அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி வந்த ஜெயம் ரவி, தனது நடிப்பின் மூலம் பலராலும் பாராட்டப்பட்டார். தற்போது, இறைவன், சைரன் ஆகிய படங்களில் அவர் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக எஸ் எம் எஸ் இயக்குனர் ராஜேஷ் உடன் ஒரு திரைப்படம், ஜீனி திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இது ஒரு புறம் இருக்க தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுப்பதற்காக மோகன் ராஜா தீவிரம் காட்டி வருகிறார். ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு வெளியான தனி ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மோகன் ராஜா ஒரு ரீமேக் இயக்குனர் என பலரும் வசைப்பாடி வந்த நிலையில், அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக தனி ஒருவனை இயக்கி, திரைத்துறையில் தனி ஒருவனாய் உயர்ந்தார் மோகன் ராஜா.

- Advertisement -

இது திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் யார் என்றால் அது நிச்சயம் அரவிந்த்சாமி தான். சித்தார்த் அபிமன்யு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஒவ்வொரு பிரேமிலும் ஸ்டைலிஷ் ஆக வந்து மிரட்டலாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த நிலையில், தனி ஒருவன் ரிலீஸ் ஆகி எட்டு வருடங்களை கடந்திருப்பதால், நாளை அந்தப் படத்திற்கான இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு வெளியாகிறது.

- Advertisement -

இதற்கான சிறப்பு டீசரையும் மோகன் ராஜா வெளியிட இருக்கிறார். முதல் பாகத்தில் வில்லன் கதாபாத்திரம் மிக வெயிட்டாக படைக்கப்பட்டிருந்ததால், இந்தப் படத்திற்கும் வில்லனாக நடிக்க போவது யார் என்று கேள்வி எழுந்துள்ளது. மம்முட்டி, பகத் பாசில், அர்ஜுன் ஆகியோரில் ஒருவர் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தனி ஒருவன் இரண்டாம் பாகத்திற்கான அறிவிப்பை ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

Most Popular