Monday, April 29, 2024
- Advertisement -
Homeசினிமாஜவான் 1000 கோடியை நெருங்கியதை அடுத்து அதிரடியாக சம்பளம் உயர்த்திய அட்லீ.. ! அடுத்தப் படம்...

ஜவான் 1000 கோடியை நெருங்கியதை அடுத்து அதிரடியாக சம்பளம் உயர்த்திய அட்லீ.. ! அடுத்தப் படம் யாருடன் என்பதை விவரிப்பு.. !

தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய வெற்றித் திரைப்படங்களைத் தந்த அட்லீ தன் 5வது படத்திலேயே ஷாரூக் கானை இயக்கியுள்ளார். ஷாரூக் கானுக்கு தேவைப்பட்ட அந்த கம்பேக்கை பதான் படமும் தற்போது அட்லியின் ஜவான் திரைப்படமும் கொடுத்துள்ளது.

- Advertisement -

அட்லீ இயக்கத்தில் ஷாரூக் கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரது நடிப்பில் அனிருத்தின் தெரிக்கும் இசையில் வெளியாகியுள்ள திரைப்படம் ஜவான். மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்ட இத்திரைப்படம் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தக்க வைத்துக் கொண்டு வசூல் சாதனையில் ஈடுபட்டு வருகிறது.

முதல் மூன்று நாட்களிலேயே உலகெங்கும் 500 கோடிகளைத் தாண்டிவிட்டது. விரைவில் 1000 கோடிகளை வசூலித்தும் விடும். அட்லின் கேரியரில் இது மிகப் பெரிய சாதனை. இந்தத் படத்திற்காக அவர் 2 – 3 ஆண்டுகள் உழைத்துள்ளார். அவர் கமர்ஷியலில் புகுந்து விளையாடுவார் என்பதை நாம் நன்கு அறிவோம். ஜவான் படத்தில் ஷாரூக் கான் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் செதுக்கியுள்ளார்.

- Advertisement -

இத்திரைப்படத்திற்கு அட்லீ நினைத்ததை விட குறைவாக சம்பளம் வாங்கியுள்ளார். முதலில் 50 கோடி வாங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் முதல் ஹிந்தி படம் என்பதாலும் தகுந்த கமர்ஷியல் சினிமா வழங்கும் எண்ணத்திலும் 30 கோடிக்கு பணி செய்தார். அவரது பணியைச் சரியாக செய்ததால் ஹிந்தி மார்கெட்டில் அவரது டிமாண்ட் ஏகிறியுள்ளது.

- Advertisement -

பல நட்சத்திர ஹிந்தி நடிகர்கள் அட்லீ ஹிந்தியில் இன்னும் பல படங்கள் செய்ய வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளனர். அட்லியும் தன் விருப்பத்தை பகிர்ந்துள்ளார். ஜவான் வெற்றியைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக சல்மான் கான், ஆமீர் கான் மற்றும் ரித்திக் ரோசனுடன் இணைந்து செயல்பட ஆசையாக இருப்பதாக கூறியுள்ளார். ஹிந்தியிலும் அவர் தன் திறனை நிரூபித்தால் அடுத்தப் படத்திற்கு குறைந்தது 50 கோடி வாங்குவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Most Popular