Tuesday, May 14, 2024
- Advertisement -
Homeசினிமாஅயலான் இசை வெளியீட்டு விழா இமானுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்

அயலான் இசை வெளியீட்டு விழா இமானுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்

ஆலையில் சிக்கினால் தான் கரும்பு சர்க்கரையாகும் அதேபோல் காசி பில் சிக்கினால் தான் நடிகர்கள் சாதிக்க முடியும் என்பது போல் தற்பொழுது உயர்ந்து முன்னணியில் இருக்கும் அனைத்து நடிகர் நடிகைகளுமே காசிப் என்று சொல்லப்படும் கிசுகிசுகளில் சிக்கி தான் வெளிவந்திருக்கிறார்கள்.

- Advertisement -

பிக் பாஸில் செல்வது போல் ஐ வில் வாட்சிங் யூ என்று நெட்டிசன்களும் பத்திரிக்கையாளர்களும் நடிகர் நடிகைகளை வாட்ச் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் எந்தவித கிசுகிசுகளிலும் சிக்காமல் உயர்ந்திருக்கும் நடிகர்கள் ஒரு சிலரை ஆவார்கள் .அந்த வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒருவராவார்.

அவரை நேரில் கண்டு பழகிய பலரும் சக நடிகர் நடிகைகளுமே அவரை அவருடைய தாய் நல்ல முறையில் வளர்த்திருக்கிறார் என்று பல பேட்டிகளில் கூறி இருக்கிறார்கள் அப்படி ஒரு கண்ணியம் அவர் மீது ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது ஆனால் ,சமீபத்தில் இசையமைப்பாளர் டி. இமான் கூறிய ஒரு சம்பவம் சிவகார்த்திகேயனின் இமேஜை கெடுக்க பார்த்தது.

- Advertisement -

நீங்களும் சிவகார்த்திகேயனும் ஏன் சேர்ந்து பணியாற்றுவதில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் எனக்கு சொல்ல முடியாத ஒரு துரோகத்தை செய்து விட்டார். அதை வெளியில் கூறினால் என் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று இமான் குறிப்பிட்டிருந்தார். இமான் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாவது மனைவியுடன் தான் தற்பொழுது வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறார் .

- Advertisement -

இமான் இப்படிக் கூறியதையும் அவர் அவருடைய முதல் மனைவியை விவாகரத்து செய்ததையும் கருத்தில் கொண்டு இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று வதந்தியை பரவ விட்டார்கள் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்காதவர்கள்.இமான் கூறியது போல் சிவகார்த்திகேயனால் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்று இமான் முதல் மனைவியே எதிர்ப்பு தெரிவித்திருந்தார் .ஆனால் சிவகார்த்திகேயனிடம் இருந்து இது பற்றி எந்தவித கருத்தும் வெளிவரவில்லை.

ஆனால் நேற்று அயலான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அது சிவகார்த்திகேயன் பேசும் பொழுது அவர் கூறிய கருத்துக்கள் இதுக்கு பொருத்தமாக அமைந்திருந்தது.

வருகின்ற பொங்கலுக்கு அயலானுடன் சேர்ந்து கேப்டன் மில்லர் லால் சலாம் போன்ற திரைப்படங்களும் வெளிவர இருக்கிறது. எந்த திரைப்படம் வேண்டுமானாலும் வெளிவரட்டும் எல்லா திரைப்படங்களுமே வெற்றி அடையட்டும் இதனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று பெருந்தன்மையுடன் கூறி இருந்தார்

அதே சமயம் அவர் ரசிகர்களிடம் என்னை பிடிக்காதவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை யார் என்ன வேண்டுமானாலும் கூறிக் கொள்ளட்டும் நான் எனக்குப் பிடித்தவர்களுக்காக என் பாதையில் நான் செல்கிறேன் என்று கூறினார்.

சிறிய வார்த்தையில் பெரிய கருத்தை ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் இந்த இசை வெளியீட்டு விழா வருகின்ற புத்தாண்டு அன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் என்றும் கூறப்படுகிறது

Most Popular