Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாசந்திரமுகி 2 படக்குழுவினர் வெளியிட்ட முரட்டு அப்டேட்!

சந்திரமுகி 2 படக்குழுவினர் வெளியிட்ட முரட்டு அப்டேட்!

2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் வெளிவந்தது சந்திரமுகி. இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு ,ஜோதிகா, வடிவேலு, நயன்தாரா போன்ற நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தாலும் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்தது.நடிகை ஜோதிகாவின் மிரட்டலான நடிப்புதான் ஒரு சாதாரண மென்மையான பெண்ணாக சிரித்து பேசி நடித்து வந்த ஜோதிகாவை இப்படி ஒரு ஆக்ரோஷமான கதாபாத்திரத்தில் பார்த்தது ரசிகர்கள் மனது நின்றுவிட்டது.

எத்தனையோ ஆக்ஷன் ஹீரோக்கள் நடித்த திரைப்படங்கள் கூட இத்தனை நாட்கள் ஓடி இருக்காது.ஆனால் இத்திரைப்படம் சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் 890 நாட்கள் ஓடி பெரிய சாதனையை படைத்திருக்கிறது. பாக்ஸ் ஆபிஸில் இது மிகப்பெரிய வெற்றி திரைப்படம் ஆகும்.

- Advertisement -

இந்தத் திரைப்படத்தினால் ஏற்பட்ட தாக்கம் இன்று வரையும் மக்கள் மனதில் நிற்கிறது சந்திரமுகி என்ற கதாபாத்திரத்தை வைத்து எத்தனையோ திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளும் எடுத்து வருகிறார்கள். இப்படிப்பட்ட திரைப்படத்தை ஏறத்தாழ 17 ஆண்டுகள் கழித்து இயக்குனர் வாசு திரைப்படத்தின் உடைய இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார்.

- Advertisement -

இந்தத் திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ்,ரங்கநா ராணாவத் ,ராதிகா லட்சுமிமேனன், வடிவேலு போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தின் நடிகை ஜோதிகாவிற்கு பதிலாக ரங்கநா ராணாவத் சந்திரமுகி ஆக நடித்து வருகிறார்.

முனி, காஞ்சனா, சிவலிங்கா போன்ற பேயை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களை அதிகம் நடித்திருக்கிறார். ராகவா லாரன்ஸ் அந்தத் திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் ஒரு அளவு நல்ல வரவேற்புகளை தான் பெற்றிருக்கிறது. அந்த வகையில் தற்பொழுது இவர் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிப்பதும் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இது எல்லாம் ஒரு புறம் இருக்க இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 90% முடிந்துவிட்டது என்று தகவல்கள் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து விரைவில் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்று படக்குழுவினர்கள் முடிவு செய்து விறுவிறுப்பாக படப்பிடிப்பை எடுத்து வருகிறார்கள் என்ற தகவலும் அண்மையில் வந்தது.

அதைத் தொடர்ந்து தற்பொழுது இந்த திரைப்படத்தின் உடைய தாக படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விட்டது என்று இத்திரைப்படத்தை இயக்குனர் பி வாசு கூறியிருக்கிறார்.

இது காரணத்தினால் கூடிய விரைவில் இத்திரை திரைப்படம் வெளியிடப்படும். தேதியை அறிவிப்பார்கள் என்றும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Most Popular