Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாநடிகர் அஜித்தால் பட வாய்ப்பை இழந்தேன்.. இயக்குனர் பிரவீன் காந்தி பேட்டி

நடிகர் அஜித்தால் பட வாய்ப்பை இழந்தேன்.. இயக்குனர் பிரவீன் காந்தி பேட்டி

- Advertisement -

ரட்சகன், ஜோடி, ஸ்டார் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் பிரவீன் காந்தி. அவருடைய  படத்தின் காதல் கதை வித்தியாசமாகவும் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திரைப்படம் அமைந்திருக்கும். இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தான் நடிகர் அஜித்தை வைத்து அபூர்வம் என்ற படத்தை எடுக்க இருந்ததாகவும், ஆனால் அதிலிருந்து தான் நீக்கப்பட்டு விட்டதாகவும் பிரவீன் காந்தி கூறியுள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில் ஜோடி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்தை வைத்து அபூர்வன் என்ற படத்தை நான் இயக்க இருந்தேன். அந்த படத்திற்கு நான் சம்பளமே வாங்கவில்லை. தயாரிப்பாளர் எனக்கு அட்வான்ஸ் கூட கொடுக்கவில்லை. சுமார் ஒரு மாத காலம் இந்த படத்திற்காகத்தான் உழைத்தேன். இந்த படத்தில் நடிக்க ஜோதிகா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்களை சந்தித்து நடிக்கவும் கேட்டேன்.

- Advertisement -

அஜித்துக்கு கதை பிடித்து போய் தான் அவர் நடிக்க ஒப்பு கொண்டார். ஆனால் ஒவ்வொரு நாளும் என்னுடைய கலைஞர்கள் மாற்றப்பட்டு கொண்டு இருந்தார்கள். கேமரா மேன், மேக்கப் ஆர்டிஸ்ட் என அனைவரும் மாற்றப்பட்டார்கள். இது எனக்கு எரிச்சலை கொடுத்தது.ஏன் என்னுடைய கலைஞர்களை மாற்றுகிறீர்கள் என்று கேட்டால் அஜித் சார் தான் மாற்ற சொன்னார் என அனைவரும் பதில் அளிப்பார்கள்.

- Advertisement -

இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அப்போது நான் இயக்குனரா இல்லை அஜித் இயக்குனரா என நான் கேட்டேன். இதனை அஜித் சாரிடம் போய் யாரோ சொல்லிவிட்டார்கள். இதனால் கோபம் அடைந்த அஜித் என்னை படத்திலிருந்து நீக்கிவிட்டார்.இது  என்னுடைய திரைப்பட வாழ்க்கையில் மிகப்பெரிய சரிவை கொடுத்தது.

அதன் பிறகு அஜித் சாரை சந்தித்து எந்த விளக்கத்தையும் நான் கொடுக்கவில்லை. அதன் பிறகு என்னுடைய நண்பரும் அப்போதைய துணை இயக்குனருமான முருகதாஸ், அஜித்துக்காக கதை சொல்லி இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அவருடைய வாழ்க்கையை கெடுத்து விடக்கூடாது என்பதற்காக நான் அமைதியாகி விட்டேன்.

அஜித்துடன் அதன் பிறகு நான் பேசியதில்லை. அஜித் வைத்து அந்த படத்தை நான் கொடுத்திருந்தால் என்னுடைய திரைப்பட வாழ்க்கை ஒரு மைல்கல்லாக இருந்திருக்கும். பிறகு அஜித்துக்கு செய்த கதையை மீண்டும் பிரசாந்தை வைத்து ஸ்டார் என்ற படத்தை எடுத்தேன் என்று பிரவீன் காந்தி கூறியுள்ளார்.

Most Popular