Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமாஅமரன் திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் ராஜ்குமார் கூறிய செய்தி ..! மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்...

அமரன் திரைப்படத்தைப் பற்றி இயக்குனர் ராஜ்குமார் கூறிய செய்தி ..! மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்..!

இயக்குனர ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் திரைப்படம் ரசிகர்களால் பெருமளவில் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

இந்தத் திரைப்படம் இந்தியன் ஆர்மி சோல்ஜராக இருந்து மரணித்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு. இந்த திரைப்படத்தின் கம்பீரமாக முகுந்த் வரதராஜன் ஆக நடித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இந்த திரைப்படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் வெளியிடப்பட்டது டீசரை பார்ப்பதற்கே மிகவும் பரபரப்பாக இருந்தது .அடுத்தது என்ன நடக்கப்போகிறது என்ற திகிலான நிமிடங்களைக் கொண்டு திரைப்படம் அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் கடைசியாக திரையரங்கில் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் மீது பல எதிர்பார்ப்புகள் இருந்தது . டெக்னிக்கல் டீம்ஸ்க்கு கிடைத்த பாராட்டுகளால் வசூல் ரீதியாக ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களைத் தான் பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து தற்பொழுது இவர் நடித்திருக்கும் அமரன் திரைப்படம் நல்ல வெற்றி அடையும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

- Advertisement -

இது குறித்து ஒரு பேட்டியில் திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பேசியிருக்கிறார். இத்திரைப்படம் வெறும் பயோபிக்காக மட்டும் இருந்து விடாது என்ற குறிப்பை வெளியிட்டு இருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி .இதற்கு மேல் இதைப்பற்றி எதுவும் கூற வேண்டாம் என்று கூறினார். மேலும் திரைப்படம் காஷ்மீரில் படமாக்கப்பட்டதை பற்றியும் கூறியிருந்தார். காஷ்மீரின் சூழ்நிலையும் காஸ்மீரில் உள்ள மக்களுமே இதில் கதாபாத்திரங்களாக இருந்திருக்கிறார்கள் .

மேஜர் முக்குந்த் வரதராஜனை பற்றி தெரிந்து கொள்வதற்காக ரிசர்ச் செய்தபோது நிறைய விஷயங்கள் தெரிந்தது. இதெல்லாம் நடக்க என்ன காரணம் .இது எப்படி நடந்தது, இது அது எப்படி நடந்தது என்று நிறைய கேள்விகள் நுழைந்து ஆச்சரியத்தை தந்தது அதை எல்லாம் சுருக்கி எவ்வளவு தெளிவாக படமாக்க முடியுமோ அந்த அளவிற்கு படத்தை அமைக்க வேண்டும் என்று நினைத்தேன். அதே சமயம் அதனுடைய ஆழ கருத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று நான் நினைத்ததை இது திரைப்படத்தில் நடித்தவர்களும் புரிந்துகொண்டு அதற்கேற்றது போல் நடித்தார்கள்.

இத்திரைப்படத்தின் முக்கிய கருவாக இருக்கும் மேஜர் முகுந்தின் பிறந்தநாள் வருகின்ற ஏப்ரல் 12ஆம் தேதி நடக்க இருக்கிறது. அன்றைய நாளை குறி வைத்து திரைப்படத்தை வெளியிடும் நோக்கம் எதுவும் இருக்கிறதா என்று தொகுப்பாளர் கேட்டார். அதற்கு இயக்குனர் அப்படியெல்லாம் இல்லை அதை எல்லாம் தயாரிப்பு நிறுவனம் தான் சொல்ல வேண்டும். வேண்டுமென்றால் அன்றைய நாளில் வேறு ஏதாவது திரைப்படம் சம்பந்தமான அப்டேட்ஸ்கள் வெளிவரலாம் ஆனால் அந்த நாளிலிருந்து மிகக் விரைவில் இத்திரைப்படம் வெளியிடப்படும் என்று கூறியிருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி.

Most Popular