Saturday, May 18, 2024
- Advertisement -
Homeசினிமாநடிகர் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படத்தை திரைப்படத்தை இவர்தான் இயக்க உள்ளாரா? -

நடிகர் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படத்தை திரைப்படத்தை இவர்தான் இயக்க உள்ளாரா? –

தமிழ் சினிமாவில் குறும்புத்தனமான வில்லன் நடிகர் என அறியப்பட்ட நடிகர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிகராக நடிக்கும் படங்கள் அதிக அளவில் வெற்றி பெறாமல் போனாலும் வசூல் ரீதியாக ஓரளவுக்கு அவரை பெயர் வாங்கி கொடுக்கும். ஆனால் அவர் வில்லனாக நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெறும். இதனால் இவர் வில்லனாக நடிப்பதையே ரசிகர்கள் அனைவரும் விரும்புகிறார்கள். இந்த நிலையில் இவர் நடிக்க போகும் ஐம்பதாவது திரைப்படம் பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகத்திற்கு நடிகராக அறிமுகம் ஆனார். அந்த படம் தேசிய விருது வென்றது. அதற்கு அடுத்ததாக வெளிவந்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடிதான், மற்றும் பல படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது. இதன்மூலம் தமிழ் திரை உலகில் நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.

இவர் தற்பொழுது தமிழ் மொழியை தாண்டி இந்தி,தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்டு வர தொடங்கியுள்ளார். இந்த நிலையில் தற்பொழுது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் விடுதலை 1 படத்திலும் இவருடைய நடிப்பு அதிகமாக பேசப்பட்டது. இதை தொடர்ந்து விடுதலை 2 உம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் இயக்குனர் அட்லீயுடன் நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படத்தை குரங்கு பொம்மை இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

நித்திலன் இயக்கிய குரங்கு பொம்மை திரைப்படத்தில் நடிகர் விதார்த் மற்றும் பாரதிராஜா நடித்திருந்தார்கள். இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. விமர்சன ரீதியிலும் சிறந்த விமர்சனங்களை பெற்றது.இதனால் இவர்கள் இருவரும் இணையும் ஐம்பதாவது திரைப்படத்திற்கான எதிர்பார்ப்புகள் இப்போதே தொடங்கி விட்டன.

நித்திலன் சுவாமிநாதன் ஒரு இயக்குனர் என்பதை தாண்டி ஒரு சிறந்த கதாசிரியர் என்பதை தெலுங்கில் வெளியான ஒம்ப தானே டிக்கு என்ற தெலுங்கு படத்தின் மூலம் தனது திறமையை வெளிக்காட்டி இருந்தார். அந்த திரைப்படம் தெலுங்கு திரை உலகில் ஒரு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular