Sunday, May 5, 2024
- Advertisement -
HomeEntertainmentரசிகர்களை பார்த்துவிட்டு டெட்டாயில் ஊற்றி கை கழுவினாரா அஜித்? உண்மை என்ன? நீங்களே பாருங்கள்!

ரசிகர்களை பார்த்துவிட்டு டெட்டாயில் ஊற்றி கை கழுவினாரா அஜித்? உண்மை என்ன? நீங்களே பாருங்கள்!

துணிவு திரைப்படத்தின் சூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே, நடிகர் அஜித் அடுத்ததாக விக்னேஷ் சிவனுடன் இணைவதாக அறிவிக்கப்பட்டது. அஜித் 62 வது திரைப்படமாக உருவாகும் இதனை, லைகா நிறுவனம் தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் அஜித்துடன் இணைந்திருப்பதால், இந்த படம் எப்படி இருக்கப் போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

- Advertisement -

காமெடி கலந்த ஆக்சன் திரைப்படமாக இது உருவாகும் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் திடீர் என தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட மோதல் காரணமாக விக்னேஷ் சிவன், அஜித் 62 ப்ராஜெக்ட் இருந்து வெளியேறினார். இதையடுத்து அஜித் படத்தை, மகிழ் திரு மேனி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. மே ஒன்றாம் தேதி இதன் அறிவிப்பு வெளியான நிலையில், படத்தின் டைட்டிலும் விடாமுயற்சி என்பதை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.

என்ன இந்த படத்திற்கும் வி சென்டிமென்ட் தானா என உச்சு கொட்டிய அஜித் ரசிகர்கள், வேறு ஏதாவது நல்ல டைட்டிலை தேர்ந்தெடுத்து இருக்கலாம் என்று கூறி வந்தனர். அதே சமயம், விடாமுயற்சியின் பெயரின் வடிவமைப்பு வித்தியாசமாக இருப்பதாகவும், தொலைத்தொடர்பை குறிப்பிடும் வகையில் அதன் எழுத்து வடிவங்கள் உள்ளதாகவும் அஜித் ரசிகர்கள் கண்டுபிடித்தனர். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அஜித் மகிழ் திருமேனி கூட்டணியின் அடுத்த அப்டேட் எதுவும் வெளியாகாததால் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

- Advertisement -

வலிமை திரைப்படத்தை போல இதற்கும் அப்டேட் கேட்கக் கூடாது என்பதில் தெளிவாய் இருந்து அவர்கள், விடாமுயற்சி விஷயத்தில் கப்சிப் ஆகினர். இது ஒரு பக்கம் இருக்க, நடிப்பை தாண்டி ட்ரோன் செய்வது, பைக் கார் ஓட்டுவதில் ஆர்வம் காட்டும் அஜித், தனது ரேஸ் பைக்கை எடுத்து ஊர் ஊராக சுற்ற ஆரம்பித்தார். முதலில் இந்தியா முழுவதும் பயணம் செய்த அவர், பிறகு உலக நாடுகளின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் தனது வண்டியை விட்டார். அவரை யாராச்சும் கண்ட்ரோல் பண்ணுங்கப்பா என எதிர் தரப்பில் கிண்டல் அடிக்க, விடாமுயற்சி வீண்முயற்சி ஆகிவிட்டதோ என்ற கேள்வியும் எழுந்தது.

- Advertisement -

இந்த சமயத்தில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லைகா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், விடாமுயற்சியின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும், இது எங்களுக்கு பெருமைமிக்க ஒரு திட்டம் எனவும் தெரிவித்தார். இந்தப் பக்கம் வெளிநாடுகளில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் அஜித், கிண்டி ரேஸ் கோர்ஸிற்கு சென்று, குழந்தைகளுடன் சைக்கிள் ஓட்ட ஆரம்பித்தார். வாழ்ந்தால் அஜித்தை போல் தான் வாழ வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் சிலாகிக்க, தற்போது அங்கு நடந்த ஒரு விஷயம் தான் இணையத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அதாவது கிண்டி ரேஸ் கோர்ஸில், ரசிகர்கள் அஜித்தை சூழ்ந்து கொண்டு கை கொடுத்தபடி புகைப்படம் எடுத்த போது, நடிகர் அஜித் தனது கைகளில் டெட்டாயில் ஊற்றி சுத்தம் செய்ததாக ஒரு புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதை இணையத்தில் வைரல் ஆக்கும் சிலர், அஜித் ஏன் இப்படி கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுகிறார் என்று கேள்வி எழுப்பினர்.

இதனால் கொதித்தெழுந்த அஜித் ரசிகர்கள், அது டெட்டால் கிருமி நாசினி இல்லை என்றும், அஜித் பேப்பர் போட் ஜூஸை கையில் வைத்திருக்கிறார் என்று கூறி அதற்கான தெளிவான புகைப்படத்தை வெளியே விட்டிருக்கின்றனர். இதைப் பார்த்து தவறை ஒப்புக்கொண்ட சிலர், தேவையில்லாமல் அஜித் தீண்டி விட்டோமே என இணையத்தில் பம்மி போய் உள்ளனர்.

Most Popular